December 19, 2011

ஆரம்பமே அபத்தமான கம்யூனிஸக் கொள்கை (மண்ணைக்கவ்விய மார்க்ஸிஸம்) (தொடர் 3)

ஏக இறைவனின் திருப்பெயரால்
சகோதர சகோதரிகளே கம்யூனிஸம் எனும் சித்தாந்தம் பொருள் முதல் வாதம் மற்றும் கருத்து முதல் வாதம் எனும் இரண்டு தத்துவங்களின் கூட்டுக்கலவையில் உண்டாக்கப்பட்டதுதான் (இந்த இரண்டு தத்துவங்களையும் தனித்தனியாக சென்ற தொடரில் விளக்கியுள்ளோம்)
இவையிரண்டுமே கடவுள் மறுப்பை அடிப்படையாகக் கொண்ட தத்துவங்கள்தான் என்றாலும் அவையிரண்டும் பரஸ்பரம் முரன்பட்ட தத்துவங்களாகும் ஏனென்றால் கருத்திலிருந்துதான் பிரபஞ்சம் உண்டானது என்று ஏற்றுக்கொண்டால் பொருள் முதல் வாதம் தவறானது என்று ஆகிவிடும் அதேபோல் பொருளில் இருந்துதான் பிரபஞ்சம் உண்டானது என்று ஏற்றுக்கொண்டால் கருத்து முதல் வாதம் தவறானதென ஆகிவிடும் மார்க்ஸ் முதலில் இவையிரண்டையுமே சரிகண்டார் பின்னர் பல வருடங்கள் தொடர்ந்து ஆய்வு? செய்து அவைகள் ஒவ்வொன்றிலும் தனித்தனியாக சில குறைகளைக் கண்டறிந்த மார்க்ஸ் இறுதியாக எங்கள்ஸுடன் சேர்ந்து பொருள் முதல் வாதத்திலிருந்து அடிப்படைகளையும் கருத்து முதல்வாதத்திலிருந்து சட்டங்களையும் எடுத்து வரலாற்று இயக்கவியல் பொருள் முதல்வாதம் எனும் புதிய தத்துவத்தை உண்டாக்கி அதை ஜெர்மன் சித்தாந்தம் (the german ideology)

December 09, 2011

கம்யூனிஸம் ஒரு சுருக்கமான அறிமுகம் (மண்ணைக்கவ்விய மார்க்ஸிஸம் தொடர் 2)

 ஏக இறைவனின் திருப்பெயரால்
சகோதர சகோதரிகளே ஒரு கொள்கையை விமர்சிக்கும் முன் அதுவும் அந்தக்கொள்கையின் அடிப்படை துவங்கி அனைத்தையும் ஆராய்ந்து விமர்சிக்கும் முன் அந்தக்கொள்கையின் அடிப்படைச் சாராம்சத்தை விளக்கிவிட்டு விமர்சனத்தைத் தொடர்வது நல்லது என்று நினைக்கிறோம் அந்த அடிப்படையில் நாம் விமர்சிக்கப் புகுந்துள்ள கம்யூனிஸக்கொள்கையின் அடிப்படைச் சாராம்சத்தை சுருக்கமாக கீழே தருகின்றோம்
கம்யூனிஸம் உருவான வரலாறு
கம்யூனிஸக்கொள்கை என்பது ஆதிகாலம் முதலே பூமியில் உள்ளதுதான் என்று கம்யூனிஸ வாதிகளால் சொல்லப்பட்டாலும்  இன்று உலகில் நாம் காணும் கம்யூனிஸக் கொள்கையை உருவாக்கியவர் காரல் மார்க்ஸ் என்பவர்தான் கம்யூனிஸக் கொள்கைக்கு வடிவம் கொடுத்ததில் எங்கல்ஸ்சும் ஒருவர் தான் என்றாலும் இது விஷயத்தில் மார்க்ஸிற்க்குத் தான் அதிக பங்கு உள்ளது

December 03, 2011

மண்ணைக்கவ்விய மார்க்ஸிஸம்

ஏக இறைவனின் திருப்பெயரால்
சமீபகாலமாக தமிழ் இனைய உலகில் மாவொய்ஸ்ட் சிந்தனை கொண்ட கம்யூனிஸ்ட்கள் இஸ்லாத்தைத் தவறாக விமர்சித்து வருகின்றனர் தங்களின் கொள்கையை முன்னிருத்தி இஸ்லாத்தை விமர்சிக்க முன்வராதவர்களை முஸ்லீம்கள் நேரடிவிவாதத்திற்க்கு அழைத்தாலும் வரமாட்டோம் இனையத்தில்தான் எழுதுவோம் என்று சொல்லிக்கொண்டிருக்கின்றனர் அவர்களின் கொள்கை எந்தளவிற்க்குத் தவறானது என்பதை தெளிவுபடுத்தவே இந்தத் தொடர் வெளியிடப்படுகிறது

November 19, 2011

நிரந்தர தீர்வு இஸ்லாத்தில் தீண்டாமை தொடர் 2

ஏக இறைவனின் திருப்பெயரால்
முந்தைய தொடரில் இந்து மதமும் யூதகிருஸ்தவ மதங்களும் நாத்திகத்தின் பரிணாமவியல் கோட்பாடும் எப்படியெல்லாம் தீண்டாமையைத் தூன்டுகின்றன என்று பார்த்தோம் அந்தத் தொடரைக்காண இங்கே க்ளிக் செய்யவும்
இனி இஸ்லாம் எவ்வாறு தீண்டாமையை ஒழித்தது என்று பார்ப்போம்
தீண்டாமை எனும் கொடிய விஷத்தைப் பொருத்த வரை அது சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒன்றல்ல மனித வரலாறு தொடக்கம் முதலே தீண்டாமையும் இருந்துவந்துள்ளது எனவே தான் இந்த நவீன காலத்தில் வந்து தீண்டாமைக்குத் தீர்வு சொல்கிறோம் என்பது உன்மையான தீர்வாகாது என்கிறோம் ஒரு பிரச்சினை உருவாகும்போதே அதற்க்குத் தீர்வும் சொல்லவேண்டும் அதேநேரம் அந்தத்தீர்வானது எக்காலத்திற்க்கும் பொருந்துவதாகவும் இருக்கவேண்டும் அது முக்காலும் அறிந்த படைத்த இறைவனால் மட்டுமே முடியும் அந்த வகையில் தீண்டாமை  என்றைக்கு உருவானதோ அன்றைக்கே அதற்க்குரிய தீர்வையும் இஸ்லாம் வழங்கியுள்ளது ஆம் ஆதம்(அலை) அவர்கள் முதல் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வரை வந்த எல்லா இறைத்தூதர்களுக்கும் இஸ்லாம் எனும் மார்க்கத்தை வாழ்க்கை நெறியாக அல்லாஹ் வழங்கியதே அந்தத்தீர்வு.

November 12, 2011

நிரந்தர தீர்வு இஸ்லாத்தில் தீண்டாமை


ஏக இறைவனின் திருப்பெயரால்  
ஒரு மனிதன் தன்னைப் பேரன்ற சக மனிதன் ஒருவனை பிறப்பால் தாழ்ந்தவனாகக் கருதுவதுதான் தீண்டாமை என்பதாகும் தீண்டாமையின் அளவுகோலைப் பொருத்தவரை நம் நாட்டில் காணப்படும் வெறும் இரட்டை குவளை முறைகள் அல்லது காலில் செருப்பணிந்து செல்வதற்கு விதிக்கப்டும் தடைகள் மற்றும் அல்ல வாழ்வின் எந்தெந்த விஷயத்தில் எல்லாம் ஒரு மனிதன் இன்னெரு மனிதனை தாழ்ந்தவனாகக் கருதுகின்றானோ அவையெல்லாமே தீண்டாமைதான் தீண்டாமைக்கானக் காரணங்களைப் பொருத்தவரை நாட்டுக்கு நாடு அவை வித்தியாசப்படும் மேலை நாடுகளைப் பொருத்தவரை நிறத்தின் அடிப்படையிலும் நம்முடைய இந்தியாவை பொருத்தவரை ஜாதியின் அடிப்படையிலும் அந்த காரணம் இருக்கின்றன தீண்டாமை இன்றோ நேற்றோ தோன்றிய ஒன்றல்ல மனித சமுதாயம் பல்கிப் பெருகி கூட்டம் கூட்டமாக மனிதர்கள் வாழத் தெரடங்கிய போதிருந்தே தீண்டாமை என்ற தீய குணமும் மனிதர்களுக்குள் வளரத்தெரடங்கி இன்றைய நவீன அறிவியல் காலம் வரை மனித சமுதாயத்தில் வேறூன்றி இருப்பதைப் பார்க்கிறோம் உதாரணமாக  மிகச்சமீபத்தில் நடந்து மக்கள் மறந்து விட்ட ஏழு பேரை பழிவாங்கிய பரமக்குடி துப்பாக்கிச் சூட்டையும் சென்ற வாரம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் சி எஸ் கர்ண்ண அவர்கள் தான் தாழ்த்தப்பட்டவன் என்பதற்க்காக சக நீதிபதிகள் தன்னை அவமானப்படுத்துகிறார்கள் என்று தெரியப்படுத்திய நிகழ்ச்சியுமே தீன்டாமை எனும் விஷம் எப்படி அடிமட்டம் முதல் மேல்மட்டம் வரை பரவியுள்ளது என்பதறக்குச் சான்றாகும் எனவே மற்றுள்ள மதங்கள் எப்படி கடவுளின் பெயரால் தீண்டாமை எனும் தீமையை மனிதர்களின் மனங்களில் விதைக்கின்றன என்றும் இவைகள் கடவுளின் பெயரால் தீண்டாமையை நியாயப்படுத்தும் அதேவேளை கடவுள் மறுப்பு கொள்கையான நாத்திகக் கொள்கை தீண்டாமையை அழிக்க உதவியதா அல்லது தீண்டாமையை வளர்க்க உதவியதா என்றும் தீண்டாமை ஒழிய ஒரே தீர்வான இஸ்லாம் தீண்டாமையை எவ்வாறு ஒழித்து கட்டியது என்பதையும் பார்ப்போம்

November 05, 2011

விதியைப் பற்றிய தீர்வு இஸ்லாத்தில் இல்லையென்றால் வேறு எங்கே உள்ளது?

ஏக இறைவனின் திருப்பெயரால்
இஸ்லாமிய மார்க்கம் முஸ்லீமல்லாதவர்களால் ஒரு மதம் என்ற நிலையில் அறியப்பட்டாலும் முஸ்லீம்களால் இஸ்லாத்தை ஒரு வாழ்க்கைநெறி அல்லது வாழ்க்கைக்குரிய வழிகாட்டும் மார்க்கம் என்று சொல்லப்படுவதற்க்குக் காரணம் மற்றுள்ள மதங்களைப் போல் வெறும் வணக்கவழிபாடுகளை மற்றும் போதித்து விட்டுப்போகாமல் மனிதர்களின் வாழ்வில் இரண்டறக்கலந்துவிட்ட விஷயங்களான ஆன்மிகம் அரசியல் பொருளாதாரம் கொடுக்கல்வாங்கள் குற்றவியல் போன்ற ஜனனம் முதல் மரணம் வரை மனிதன் சந்திக்கின்ற சகலவிதமான துறைகளுக்கும் அறிவுப்பூர்வமான தீர்வை பல நூற்றான்டுகளூக்கு  முன்பே பகுத்து வழங்கியிருப்பதால்தான். இஸ்லாம் கூறும் தீர்வு எவ்வளவு அறிவிப்பூர்வமானது என்றால் ஒரு விஷயத்தில் இஸ்லாம் அறுதியிட்டுச் சொல்லும் தீர்வுகளை அது ஆன்மீகமாகட்டும் அரசியலாகட்டும் பொருளாதாரமாகட்டும் இது போன்ற வேறெந்த துறைகளாகட்டும் அவைகளுக்கு இஸ்லாம் வழங்கிய தீர்வு இன்னின்ன காரணங்களால் தவரானது அல்லது பொருந்தாதது அதைவிட அழகிய தீர்வு எங்களுடைய கொள்கைகளில் எங்களது மதத்தில் இருக்கின்றது என்று கூறி கொள்கையை முன்வைத்து இஸ்லாத்தை விமர்சிப்பதற்க்கு யாரும் முன்வரவில்லை வெறுமென பெண்ணடிமை கடுமையான சட்டம் பழமைவாதம் என்று கூக்குரலிடுபவர்களாகவே இஸ்லாத்தை விமர்சிப்பவர்க்ள உள்ளனர் இஸ்லாமிய சட்டதிட்டங்களை அதைவிட சிறந்த சட்டதிட்டங்களை எடுத்துக்காட்டி விமர்சிக்கமுன்வராதவர்களுக்கு இஸ்லாமில் கூறப்பட்டுள்ள விதியைப்பற்றிய கொள்கையை  தங்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகக் கருதிக்கொண்டு விதியைப்பற்றி இஸ்லாம் முரன்பாடாகக் கூறிவிட்டது இதிலிருந்தே இஸ்லாம் முஹம்மது நபியின் கற்பனையில் உதயமான கொள்கைதான் என்று பிரச்சாரம் செய்வதைப் பார்க்கிறோம் மற்றுள்ள மதங்களைச் சேர்ந்தவர்களும் விதியைப்பற்றிய நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பதால் விதியைப் பற்றிய இஸ்லாமியக்கண்ணோட்டத்தை விமர்சிக்க முன்வருவதில்லை (விதி பற்றி அவர்களின் நம்பிக்கைக்கும் இஸ்லாமிய நம்பிக்கைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது) ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்களும் கம்யூனிஸக்கொள்கையில் உள்ளவர்களுமே விதி பற்றிய இஸ்லாமியக் கொள்கையை விமர்சிக்கின்றனர் இவர்கள் கூறுவதுபோல விதியைப் பற்றி இஸ்லாம் இரண்டு விதமாகக் கூறியிருப்பது உண்மைதானா என்றும் இந்த விதி விஷயத்தில் இஸ்லாம் கூறும் தீர்வைவிட சிறந்த தீர்வு இவர்களிடம் உள்ளதா அல்லது இது சம்பந்தமாக இஸ்லாம் கூறும் தீர்வை விட மிகச்சிறந்த தீர்வு ஏதாவது இருக்கமுடியுமா என்பதையும் பார்ப்போம்

October 24, 2011

கடாபி பிறப்பு முதல் இறப்புவரை தொடர் 2

ஏக இறைவனின் திருப்பெயரால்
கடாபி கடந்த இரண்டு நாட்களாக உலகில் உள்ள எல்லாநாளிதழ்களிலும் முன்பக்கத்திலும் எல்லாச் செய்திச்சேனல்களிலும் நிறைந்து காணப்படும் பெயர் ஆம் நாற்பது ஆண்டுகளுக்கும்மேல் லிபியாவை ஆண்டு அந்நாட்டுப் புரட்சிப்படைகளின் கைகளாலேயே அடித்துக் கொள்ளப்பட்ட கடாபியின் சுருக்கமான வரலாற்றின் ஒரு பகுதியினை முந்தைய தொடரில் பார்த்தோம் அதில் கடாபியின் பிறப்பும் கல்வியும் புரட்சிகரச் சிந்தனை ராணுவப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றுதல் அதிகாரத்தைக் கைப்பற்றியதும் அதிரடியாகச் செய்த மாற்றங்கள் அரபு நாடுகளை ஒன்றினைக்கும் முயற்ச்சி கடாபியை கவிழ்க்க நடந்த புரட்சிகள் போன்ற சிலவிஷயங்களைப்  பாரத்தோம் அந்தத்தொடரைக்காண இங்கே க்ளிக் செய்யவும் அதன் தொடர்ச்சியாக இந்த்த்தொடரை வெளியிடுகிறோம்
கடாபி குடும்பத்தினரின் ஆடம்பரம்
பொதுவாகவே கடாபியை விமர்சிக்கப்பட்ட காரியங்களில் மிக முக்கியமானது கடாபி தனது பாதுகாப்பிற்க்காக பெண் கமான்டோக்களை வைத்திருந்ததுதான் ஆம் திருமனமாகத 
நாற்பது இளம்பெண்களைத்தான் கடாபி தனது பாதுகாப்புப் படையாக வைத்திருந்தார் அதன் பின்னர் விமர்சிக்கப்பட்டது தனது குடும்பத்தினரின் ஆடம்பரம் பற்றித்தான் கடாபி குடும்பத்தினரின் ஆடம்பரத்தைப் பற்றி உறுதியாக எந்தத் தகவலும் இல்லையென்றாலும் மேற்கத்திய ஊடகங்கள் பலவாறான செய்திகளை வெளியிட்டுள்ளன அவைகள் அவரது உறவினர்கள் ஹாலிவுட்டில் பணமுதலீடு செய்துள்ளதாகவும் மிகப்பெரிய விருந்துகளை ஏற்பாடு செய்து பாப் இசைப் பாடகர்களுடன் கூத்தடிப்பதாகவும் கடாபியின் இரண்டாவது மனைவிக்கு சொந்தமாக விமான நிறுவனம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது கடாபி கொள்ளப்பட்டு மூன்று நாட்களாகும் நிலையில் அவரின் சொத்துமதிப்பு உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக இருபதாயிரம் கோடி டாலர்களைத் தாண்டும் என்று மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

October 23, 2011

கடாபி பிறப்பு முதல் இறப்புவரை


ஏக இறைவனின் திருப்பெயரால்
கடாபி கடந்த இரண்டு நாட்களாக உலகில் உள்ள எல்லாநாளிதழ்களிலும் முன்பக்கத்திலும் எல்லாச் செய்திச்சேனல்களிலும் நிறைந்து காணப்படும் பெயர் ஆம் நாற்பது ஆண்டுகளுக்கும்மேல் லிபியாவை ஆண்டு அந்நாட்டுப் புரட்சிப்படைகளின் கைகளாலேயே அடித்துக் கொள்ளப்பட்ட கடாபியின் சுருக்கமான வரலாறை  இங்கு தருகிறோம்
பிறப்பும் கல்வியும்
1942 ம் ஆண்டு ஜூன் மாதம் ஏழாம் தேதி பிறந்த கடாபியின் முழுப்பெயர் முவம்மர் முஹம்மது அபூமின்யார் அல்கடாபி ஆகும் கடாபியின் சொந்த ஊரான ஸிர்த்திற்க்கு அருகில் பாலைவனப் பிரதேசத்தின் பெதுயுன் கோத்திரத்தில் வளர்ந்த கடாபி அங்குள்ள கதாபா கோத்திரத்தைச் சேர்ந்தவர் வீட்டிற்க்கு அருகில் உள்ள முஸ்லீம் தொடக்கப்பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய கடாபி பின்னர் மிஸ்ரதயில் ஆசிரியர் ஒருவரின் மாணவராகச் சேர்ந்து தொடர்ந்து கல்வி கற்றார் 1961 ல் தலைநகர் பெங்காசியில் உள்ள லிபியன் ரானுவ அகடாமியில் சேர்ந்து ராணுவக்கல்வி பயின்று அதன் தொடர்ச்சியாக இங்கிலாந்து சென்று அங்கு நான்கு மாதம் ராணுவ உயர்கல்வியை கற்றுமுடித்தார்
புரட்சிகரச் சிந்தனை
முவம்மர் கடாபி சிறுவயது முதலே புரட்சிகரச் சிந்தனை உள்ளவராக விளங்கினார் தான் பிறப்பதற்க்குச் சில வருடங்கள் முன்பு வரை தன் தாய்நாட்டில் நடைபெற்ற விடுதலைப் போராட்டமும் அதில் உமர் முக்தார் போன்றோரின் தியாக வரலாறையெல்லாம் வாய்வழியாகக் கேட்டதும் ரஷ்ய கம்யூனிஸப்புரட்சியைத் தேடிப்பிடித்து படித்ததும் அக்காலகட்டத்தில் பாலஸ்தீன மன்னில் சிறு தொகையினராக வாழ்ந்து கொண்டிருந்த யூதர்கள் தங்களின் தந்திரத்தாலும் இங்கிலாந்தின் நூறுசதவித முழு ஆதரவுடனும் தங்களுக்கென இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கிக் கொண்டு மற்ற அரபு நாடுகளுக்குச் சவால் விட்டுக் கொண்டிருந்தததுமே அவரின் புரட்சிகரச் சிந்தனைக்கு வித்திட்டது எனலாம்

October 20, 2011

சத்தியத்தை மறுப்பதும் மறைப்பதும் தொடர் 4 (இறுதித்தொடர்)


ஏக இறைவனின் திருப்பெயரால்
சத்தியத்தை மறுப்பதும் மறைப்பதும் என்ற இந்தத் தலைப்பின் கீழ் இதுவரை மார்க்க அறிஞர்களுல் தாங்கள் இவ்வளவு காலமும் கொண்டிருக்கும் கொள்கைகளுக்கு எதிராக இருப்பதால் பொருந்தாத காரணத்தைச் சொல்லி சத்தியத்தை மறுப்பவர்களைப் பற்றி தொடர் ஒன்றிலும் தொடர் ஒன்றைக் காண இங்கே க்ளிக் செய்யவும் சத்தியம் இதுதான் என்று தெரிந்து கொண்டே பலபல காரணங்களைச் சொல்லி சத்தியத்தை மறைப்பவர்களைப் பற்றி தொடர் இரண்டிலும் இரண்டாம் தொடரைக் காண இங்கே க்ளிக் செய்யவும் மார்க்க அறிஞர்களுல் சிலர் மார்க்கத்தின் மூலாதாரங்கள் எவை எவை என்பதிலேயே கருத்து வேறுபாடு கொண்டுள்ளதால் மார்க்கத்தை எந்த அடிப்படையில் பிரச்சாரம் செய்வதென்றே முடிவெடுக்க முடியாமல் எவ்விதமான பிரச்சாரப் பணிகளிலும் ஈடுபடாமல் உள்ள மார்க்க அறிஞர்களைப்  பற்றி தொடர் மூன்றிலும் பார்த்தோம் தொடர் மூன்றைக்காண இங்கே க்ளிக் செய்யவும் இனி இறுதியாக நான்காம் வகையினரான என்னுடைய உம்மத்தில் (சமுதாயம்) எல்லாக் காலத்திலும் உலகில் ஏதாவது ஒரு பகுதியில் நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் கூட்டம் ஒன்று இருந்து கொண்டே இருக்கும் என நபி(ஸல்) அவர்களால் முன்ன்றிவிப்புச் செய்யப்பட்ட நன்மையை ஏவி தீமையைத் தடுக்கக்கூடிய உன்மையான மார்க்க அறிஞர்களைப் பற்றிப் பார்ப்போம் சுமார் 20 25 வருடங்களுக்கு முன்னால் தமிழுழக  முஸ்லீம்கள் மார்க்க விஷயத்தில் எந்த நிலையில் இருந்தார்கள் என்று பின்னோக்கிச் சிந்தித்துப் பார்த்தால்

October 17, 2011

தமிழ்மணமே மன்னிப்புக்கேள்

ஏக இறைவனின் திருப்பெயரால்
தமிழ் மணத்தைப் பற்றி வலைப் பதிவர்களுக்கும் சரி தமிழ் இனைய உலகில் தொடர்புள்ளவர்களுக்கும் சரி சொல்லித் தெரியவேண்டியதில்லை அந்த அளவிற்க்கு தமிழ் மணத்திற்க்கு தமிழ் திரட்டிகளில் முக்கியமான இடம் உண்டு அப்படிப் பட்ட தமிழ்மணம் அல்லது அதில் உள்ள நிர்வாகிகளில் சிலர்சமீபகாலமாக இஸ்லாமிய எதிர்ப்புச் சிந்தனையை தங்களின் சில செயல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர் அதில் ஒன்று எதிர்க்குரல் என்ற தளத்தை நடத்தி வரும் சகோ ஆஷிக் அஹ்மத் அவர்கள் தமிழ் மணத்திடம் ஒரு கலந்துரையாடலை நடத்தியபோது முஸ்லிம்கள் சாதரணமாகச் சொல்லக்கூடிய முகமனான உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக என்று சொல்லியிருக்கின்றார் அதைப் பிடிக்கவில்லையென்றால் அதற்க்கு தமிழ் மணம் என்ன பதில் சொல்லவேண்டும்

October 15, 2011

காபா முன்பு சிவாலயமாக இருந்ததா Tamil Hindu தளத்திற்க்கு மறுப்பு

ஏக இறைவனின் திருப்பெயரால்
சில நாட்களுக்கு முன்  Tamil Hindu.என்ற தளத்தில் காபா முன்பு சிவாலயமாக இருந்ததா என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தனர் சீதாராம் கோயல் என்ற வடஇந்தியர் ஒருவர் எழுதிய கட்டுரையை ஜடாயு என்பவர்  தமிழிழ் மொழிபெயர்த்திருந்தார் பொதுவாகவே Tamil Hindu. என்ற தளம் பாசிச சிந்தனைகொண்டவர்களால் நடத்தப்படும் தளமாகும் இத்தளம் முஸ்லீம்களையும் கிருஸ்தவர்களையும் கம்யூனிஸ்ட்களையும் விமர்சித்து எழுதுவதையே தன் வேலையாகக் கொண்டுள்ளது அதிலும் குறிப்பாக முஸ்லீம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து எழுதுவதையே தன் முழுநேர வேலையாகக் கொண்டுள்ளது இதெல்லாம் சாதரனமாக பாசிச சிந்தனை கொண்டவர்களால் செய்யப்படும் வேலைதான் என்றாலும் குறிப்பிட்ட இந்தக் கட்டுரையில் கட்டுரையாளர் ஆய்வு என்ற பெயரில் அளவுக்கதிகமாக கற்பனை செய்து இஸ்லாத்தின் வருகைக்கு முன்பு காபா (மக்காவில் உள்ள இறையில்லம்) சிவாலயமாக இருந்தது என்றும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பிறந்த குலமான குரைஷிகுலத்தினர் காபாவில் பூஜைசெய்து கொண்டிருந்த ஹிந்துக்களாக (பிராமணர்கள்) இருந்தார்கள் என்றும் அதர்வன வேதத்தைத் திரித்துத்தான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை எழுதிக்கொண்டார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்  இதில் காபா முன்பு சிவாலயமாக இருந்தது என்பதைத் தவிர வேறெந்த விஷயத்தையும் நேரடியாக அவர் சொல்லவில்லை என்றாலும் மற்றுள்ளவர்கள் சொன்னதை இங்கே குறிப்பிட்டுள்ளதிலிருந்து அவரும் இந்தக் கருத்தைத் தான் நிறுவமுயன்றுள்ளார் என்பது தெரிகின்றது ஏனெனில் காபா முன்பு சிவாலயமாக இருந்தது என்று சொல்லிவிட்டால் மக்காவில் வாழ்ந்தவர்கள் இந்துக்கள் தான் என்றாகிவிடும் அவர்கள் இந்துக்கள் என்றால் அங்கே பிறந்த நபி(ஸல்) அவர்களும் பிறப்பால் அவர்களைச் சேர்ந்தவர்கள் தான் என்று நிறுவி விட்டால் குர்ஆனையும்  இந்துக்களின் வேதமாகிய அதர்வன வேதத்திலிருந்துதான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் காப்பியடித்துவிட்டார்கள் என்ற கருத்தை உருவாக்கிவிடலாம் என்பது தான் காபா முன்பு சிவாலயமாக இருந்தது என்ற தலைப்பின் நோக்கம் இவற்றையெல்லாம் சொன்னாலும் கூட இவை எதையும் என்னால் உறுதியாகக் கூறமுடியாது என்று கட்டுரையாளரே சொன்னதிலிருந்து இவையெல்லாமே பாசிச சிந்தனை கொண்டவர்களின் வெற்று ஊகம்தான் என்பது புரிந்துவிடும் இருந்தாலும் இந்தக்கருத்து எந்த அளவிற்க்கு தவறானாது என்பதைத் தெளிவுபடுத்தும் விதமாக இந்த மறுப்புக் கட்டுரை வெளியிடப்படுகின்றது

October 12, 2011

தவக்குல் கர்மானிக்கு நோபல் பரிசு அமெரிக்காவின் ராஜதந்திரம்


ஏக இறைவனின் திருப்பெயரால்
இந்த வருடத்தின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட மூன்று பெண்களில் ஒன்றாக எமன் நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளரும் எமன்நாட்டின் அரசுக்கெதிராக நடக்கும் போரட்டங்களை நடத்தும் தலைவர்களுல் ஒருவருமான தவக்குல் கர்மானி இடம்பெற்றிருந்தது பலரையும் குறிப்பாக முஸ்லீம்களை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது என்றால் மிகையல்ல ஏனென்றால் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களின் பார்வையில் உலகின் முக்கிய முஸ்லீம் அமைப்பான முஸ்லீம் பிரதர்ஸ் ஹூட் அமைப்பின் எமன் கிளையான அல்இஸ்லாஹின் முக்கிய தலைவர்களுல் ஒருவர் பர்தா அனியக்கூடியவர் மூன்று குழந்தைகளின் தாய் என்றெல்லாம் நோபல் பரிசு கிடைப்பதற்க்கு அவருக்கு நிறையவே தடைகள் இருந்தபோதும் இம்முறை இவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கிறதென்றால் அதன் பினனால் அமெரிக்காவின் ராஜதந்திரம்தான் என்பது எளிதில் புரிந்துவிடும்

October 05, 2011

உயிரனங்களின் படைப்பு மட்டுமே இறைவனின் இருப்பிற்க்கு ஆதாரமா?


ஏக இறைவனின் திருப்பெயரால்
மனித இனம் பூமியில் என்றைக்குத் தோன்றியதோ அன்று முதல் மனிதர்கள் உச்சரிக்கத் தொடங்கிய வார்த்தைதான் இறைவன் இந்தப் பூமிப்பந்தில் காலடி பதித்த முதல் மனிதன் தொடங்கி இன்றைய காலம் வரை வாழ்ந்து மரணித்த வாழ்ந்து கொண்டிருக்கின்ற கோடான கோடி மனிதர்களில் படைத்த இறைவனைத் தெரியாத ஒரே ஒரு மனிதர் கூட இருந்திருக்க முடியாது என்று மிக உறுதியாகச் சொல்லலாம் அந்த அளவிற்க்கு இயற்கையிலேயே இறைவனைப் பற்றிய அறிவு மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது இறை நம்பிக்கையற்ற எந்த சமுதாயமோ நாடு நகரமோ சிறு கிராமமோ கூட மனித வரலாற்றில் கடந்து போனதில்லை இறை நம்பிக்கையற்ற சில மனிதர்கள் சில தலைவர்கள் சில பதிற்றான்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாமே தவிர மனித வரலாறு முழுவதுமே இறைவன் என்ற ஒருவனை ஏற்றுக்கொண்டதாகவே இருந்திருக்கின்றது ஒட்டு மொத்த மனிதர்களும் தங்கள் மதநம்பிக்கையின் அடிப்படையில் இறைவனை ஏற்றுக் கொண்டாலும் மதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இறைவனை அறிமுகம் செய்கின்றன இந்த அறிமுகம் ஒவ்வொன்றும் பரஸ்பரம் எதிரெதிரானவையாகவும் இருக்கின்றது

September 29, 2011

சத்தியத்தை மறுப்பதும் மறைப்பதும் தொடர் 3


ஏக இறைவனின் திருப்பெயரால்
சத்தியத்தை மறுப்பதும் மறைப்பதும் என்ற இந்தத் தலைப்பின் கீழ் இதுவரை மார்க்க அறிஞர்களுல் தாங்கள் இவ்வளவு காலமும் கொண்டிருக்கும் கொள்கைகளுக்கு எதிராக இருப்பதால் பொருந்தாத காரணத்தைச் சொல்லி சத்தியத்தை மறுப்பவர்களைப் பற்றி தொடர் ஒன்றிலும் தொடர் ஒன்றைக் காண இங்கே க்ளிக் செய்யவும் சத்தியம் இதுதான் என்று தெரிந்து கொண்டே பலபல காரணங்களைச் சொல்லி சத்தியத்தை மறைப்பவர்களைப் பற்றி தொடர் இரண்டிலும் இரண்டாம் தொடரைக் காண இங்கே க்ளிக் செய்யவும் பார்த்தோம் இனி மார்க்க அறிஞர்களுல் சிலர் மார்க்கத்தின் மூலாதாரங்கள் எவை எவை என்பதிலேயே கருத்து வேறுபாடு கொண்டுள்ளதால் மார்க்கத்தை எந்த அடிப்படையில் பிரச்சாரம் செய்வதென்றே முடிவெடுக்க முடியாமல் எவ்விதமான பிரச்சாரப் பணிகளிலும் ஈடுபடாமல் தன்னிடம் மார்க்கச் சட்டதிட்டங்கள் மற்றும் வணக்க வழிபாடுகள் சம்பந்தமாக விளக்கம் கேட்பவர்கள் குறிப்பிட்ட ஒரு விஷயத்தைச் சொல்லி இது சம்பந்தமாக அந்த அறிஞர் அப்படிச் சொல்கிறார் இந்த அறிஞர் இப்படிச் சொல்கிறார் இதில் எது சரியானது என்று கேட்டால் மார்க்க அடிப்படையில் இது சரி இது தவறு என்று உறுதியாகக் கூறமுடியாமல் பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் பதில் சொல்லிவிட்டு நழுவி விடுபவர்களும் இருக்கிறார்கள் அவர்களைப் பற்றிப் பார்ப்போம்

September 27, 2011

தோண்டத் தோண்டப் பிணங்கள் ஜம்முகாஷ்மீரின் கண்ணீர் கதை


ஏக இறைவனின் திருப்பெயரால்

சில நாட்களுக்கு முன்னால் காஷ்மீரில் அடையாளம் தெரியாத ஆயிரக்கணக்கான இளைஞர்களின் இறந்த உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன  உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தச் சம்பவத்தை மத்திய அரசும் ஊடகங்களும் அப்படியே மூடி மறைத்தது ஞாபகமிருக்கலாம் அதைத்தொடர்ந்து இப்பொழுது ஜம்முவிலும் ஆயிரக்கணக்கான அடையாளம் தெரியாத இளைஞர்களிண் சடலங்கள் அங்குள்ள சவக்குழிகளில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதை சடலங்களை குழிவெட்டி அடக்கம் செய்த முதியவரான பரித்கான் என்பவர் வெளிப்படுத்தியுள்ளார் காஷ்மீர் பற்றியெரிந்து கொண்டிருந்த முதல் பத்து வருடம் அதாவது 1990 முதல் போலிசும் ராணுவமும் கொண்டுவந்த 2500 க்கும் மேலான அடையாளம் தெரியாத சடலங்களை தான் அடக்கம் செய்திருப்பதாக அந்த முதியவர் கூறியுள்ளார்

September 19, 2011

சத்தியத்தை மறுப்பதும் மறைப்பதும் தொடர் 2


ஏக இறைவனின் திருப்பெயரால்
சென்ற தொடரில் சத்தியத்தை மனமுரண்டாக மறுப்பவர்களைப் பற்றி பார்த்தோம் அந்தத் தொடரைக் காண இங்கே க்ளிக் செய்யவும் இந்த தொடரில் சத்தியத்தைத் தெரிந்து கொண்டே மக்களிடம் சொல்லாமல் மறைப்பவர்களைப் பற்றிப் பார்ப்போம்
மார்க்கத்தைக் கற்றுள்ள சிலர் சத்தியம் இதுதான் என்று தெரிந்து கொண்டும் தாங்கள் பணி புரியும் பள்ளி நிர்வாகத்திற்கும் மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வரும் என்று அஞ்சியும் தமது வயிற்றுப் பிழைப்புக்காகவும் சத்தியத்தை எடுத்துச் சொல்லாமல் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிக்கொள்வோரையும் பார்க்கிறோம் சத்தியப்பாதையில் இருப்பவர்கள் இவர்களிடம் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கூறிய கருத்துக்களை மறைக்காமல் அப்படியே மக்களிடம் எடுத்துக்கூறுங்கள் என்று சொன்னால் கொஞ்சம் கொஞ்சமாக? எடுத்துச் சொல்வோம் ஒரேடியாக மக்கள் கொண்டிருக்கும் கொள்கைகளுக்கு நேர் எதிரான கருத்தைச் சொன்னால் வீனான பரச்சினைகள் தான் வரும் இதன் மூலம் சமுதாய ஒற்றுமை சீர்குலையும் என்று நொண்டிச் சாக்குச் சொல்வார்கள் முதலில் இவர்கள் கூறும் காரணம் மார்க்க அடிப்படையில் சரிதானா என்று பார்த்துவிட்டு இவர்களைப் பற்றி அல்லாஹ்வும் அவனின் தூதரும் கூறும் கடும் எச்சரிக்கைகளைப் பார்ப்போம் முதலில் இவர்கள் சொல்வதைப் போல மார்க்கத்தை மறைக்காமல் அதன் தூய வடிவில் எடுத்தச்சொன்னால் அதுவும் மக்கள் கொண்டிருக்கும் கொள்கைகளுக்கு நேர் எதிரான கருத்தைச் சொன்னால் சமுதாயம் பிளவுபடுமா என்று சொன்னால் கண்டிப்பாக பிளவு படத்தான் செய்யும் ஆனால் அதற்க்காக நபி(ஸல்) அவர்களும் மற்ற நபிமார்களும் சமுதாய ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு சமுதாய ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் கருத்தக்களைச் சொல்லாமல் விட்டு விட்டார்களா அல்லது சில விஷயங்களை மறைத்துள்ளார்களா என்று இறைவேத்த்திலும் அதற்கேற்ப வாழ்ந்து காட்டிய இறைத்தூதர்களின் செய்திகளிலும் தேடிப் பார்த்தோம் என்று சொன்னால் கண்டிப்பாக அவர்கள் சமுதாய ஒற்றமையைக் கருத்தில் கொள்ளவே இல்லை மாறாக சத்தியத்திற்க்கு முன்னால் சமுதாய ஒற்றமை தடையாக வந்தபோதெல்லாம் சத்தியத்தைப் போட்டு உடைத்ததைத்தான் காணமுடிகிறது இறைத்தூர் மூஸா(அலை) அவர்களின் சமுதாயத்தைப் பற்றி நிகழ்ச்சி ஒன்றை அல்லாஹ் குர்ஆனில் கூறுவதைப் பாருங்கள்
மூஸாவுக்கு முப்பது இரவுகளை வாக்களித்தோம். அதைப் பத்து (இரவுகள்) மூலம் முழுமையாக்கினோம். எனவே அவரது இறைவன் நிர்ணயித்த காலம் நாற்பது இரவு களாக முழுமையடைந்தது. ''என் சமுதாயத்திற்கு நீர் எனக்குப் பகரமாக இருந்து சீர் திருத்துவீராக! குழப்பவாதிகளின் பாதையைப் பின்பற்றி விடாதீர்!'' என்று தம் சகோதரர் ஹாரூனிடம் மூஸா (ஏற்கனவே) கூறினார்          திருக்குர்ஆன் 7 142
மூஸா(அலை)அவர்களுக்கு இறைவன் வேதம் வழங்குவதற்க்காக குறிப்பட்ட நாளில் குறிப்பிட்ட இடத்திற்க்கு வரச்சொன்னான் மூஸா(அலை) சென்றதற்க்குப் பின் தன் சகோதரர் ஹாருன்(அலை) அவர்களை  தமது சமுதாயத்திற்க்குப் பொருப்பாளாராக விட்டுச் சென்றார்கள் அப்படி அவர்கள் விட்டுச் சென்றதற்க்குப் பின் அந்தச் சமுதாயத்தில் இருந்த சாமிரி என்ற  பொற்கொல்லன் அந்தச் சமுதாயத்தாரிடம் இருந்த ஆபரணங்களை உருக்கி காளைக் கன்றின் சிற்பத்தை உருவாக்கி இதுதான் உங்கள் இறைவனும் மூஸா(அலை) அவர்களின் இறைவனுமாகும் எனவே இதைவணங்குங்கள் என்று கூறி அந்தச் சமுதாயத்தவர்களில் பெரும்பாலோனரை ஓரிரைக் கொள்கையிலிருந்து இனைவைப்பவர்களாக மாற்றிவிட்டான் இப்பொழுது அந்தச் சமுதாயம் பிளவு பட்டு பலபேர் இனைவைப்பவர்களாகவும் சிலபேர் மட்டும் ஓரிரைக் கொள்கையிலேயே நீடிப்பவர்களாகவும் இருந்ததைக் கண்ட ஹாருன்(அலை) அவர்கள் ஓரிரைக் கொள்கையிலிருந்து தடம் புரண்டு இனைவைப்பவர்களாக மாறிவிட்டவர்களை மீண்டும் சத்தியத்தை எடுத்துச் சொல்லி ஏகத்துவத்தின் பக்கம் அழைக்கிறார்கள் இவர்கள் கூறுவதைப் போன்று சமுதாயம் பிளவு பட்டுநிற்கும் இந்த நேரத்தில் சமுதாய ஒற்றுமைதான் முக்கியம் என்று கருதி அதைக் கண்டிக்காமல் எதிர்க்காமல் சத்தியத்தை மறைத்து கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கவில்லை மாறாக ஓரிரைக் கொள்கையிலிருந்து தடம் புரண்டு போனவர்களை ஓரிரைக் கொள்கையின் பால் அழைப்பதற்க்காக சத்தியத்தை எடுத்துச் சொல்லி அவர்களிடம் கடுமையாகப் போராடியிருக்கின்றார்கள் எந்த அளவுக்கென்றால் ஹாருன்(அலை)அவர்களை அவர்கள் கொல்லவும் தயாராகிவிட்டார்கள் இதை ஹாருன்(அலை) மூஸா(அலை) அவர்களிடம் கூறியதாக அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்
கவலையும், கோபமும் கொண்டு மூஸா தமது சமுதாயத்திடம் திரும்பிய போது ''எனக்குப் பின்னர் நீங்கள் செய்தது மிகவும் கெட்டது. உங்கள் இறைவனின் கட்டளைக்கு (தண்டனைக்கு) அவசரப்படுகிறீர்களா?'' என்றார். பலகைகளைப் போட்டார். தமது சகோதரரின் தலையைப் பிடித்து தம்மை நோக்கி இழுத்தார். (அதற்கு அவரது சகோதரர்) ''என் தாயின் மகனே! இந்தச் சமுதாயத்தினர் என்னைப் பலவீனனாகக் கருதி விட்டனர். என்னைக் கொல்லவும் முயன்றனர். எனவே எதிரிகள் என்னைப் பார்த்துச் சிரிக்கும் நிலையை ஏற்படுத்தி விடாதீர்! அநீதி இழைத்த சமுதாயத்தில் என்னையும் ஆக்கி விடாதீர்!'' என்றார்.            அல்குர்ஆன் 7 150
இனி சத்தியத்தைக் கூறும் விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள் சமுதாய ஒற்றுமைக்கு என்ன அளவுகோள் வைத்திருந்தார்கள் என்பதை புஹாரியில் வரும் ஒரு ஹதீஸின் மூலம் அறியலாம்
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
'(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள்' எனும் (திருக்குர்ஆன் 26:214 வது) இறைவசனம் அருளப் பெற்றபோது நபி(ஸல்) அவர்கள் 'ஸஃபா' மலைக் குன்றின் மீது ஏறிக்கொண்டு, 'பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!' என்று குறைஷிக் குலங்களை (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அங்கு வரமுடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூ லஹப் உள்ளிட்ட குறைஷியர் (அனைவரும்) வந்(து சேர்ந்)தனர். நபி(ஸல்) அவர்கள், 'சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்களின் மீது தாக்குதல் தொடுக்கப் போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால், நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா?' என்று கேட்க, மக்கள் 'ஆம். (நம்புவோம்); உங்களிடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை' என்று பதிலளித்தனர். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கிறேன்' என்று (தம் மார்க்கக் கொள்கையைச்) கூறினார்கள். (இதைக் கேட்ட) அபூ லஹப், 'நாளெல்லாம் நீ நாசமாக! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?' என்று கூறினான். அப்போதுதான் 'அபூ லஹபின் கரங்கள் நாசமாகட்டும்! அவனும் நாசமாகட்டும்...' என்று தொடங்கும் (111 வது) அத்தியாயம் அருளப்பெற்றது              .               புஹாரி 4770.
இந்த ஹதீஸின் அடிப்படையில் நாம் தெரிந்துகொள்ளவேண்டியது உங்கள் நெருங்கிய உறவினர்களை எச்சரியுங்கள் என்று நபி(ஸல்) அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து (வஹி) இறைக்கட்டளை இறங்கிய மாத்திரத்தில் அனைவரும் காணும் வகையில் ஸஃபா குன்றின் மீது ஏறி தன் உறவினர்களின் குடும்பப் பெயர்களைக் கூறி அழைத்து அதன் மூலம் தன் பெரிய தந்தையையே தனது மார்க்கத்தின் பரம எதிரியாகப் பெற்றுக்கொன்டார்கள் என்று சொன்னால் இந்த ஆலிம்கள் கூறும் சமுதாயத்தில் என்றுமே இருந்திராத அந்தச் சமுதாய ஒற்றுமை போய்விடும் என்பதை விட நபி(ஸல்) அவர்கள் சத்தியத்தின் முன்பு சமுதாய ஒற்றுமை என்ன தன் குடும்ப ஒற்றமையைக் கூடக் கவனத்தில் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை சத்தயத்தை எடுத்துச் சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்வும் தன் தூதருக்கு அவ்வாறுதான் கட்டளையிடுகின்றான்
உமக்குக் கட்டளையிடப்பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!      அல்குர்ஆன் 15.94.
இன்னும் நபி இப்ராஹிம்(அலை)அவர்கள் தன் தந்தைக்கும் தன் சமுதாயத்திற்க்கும் எதிரே களமிறங்கியதும் இன்னும் பல நபிமார்கள் வரலாறிலும் சமுதாய ஒற்றுமை குடும்ப ஒற்றுமையை விட சத்தியக்கருத்துக்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதைப் பார்க்கிறோம் ஆகவே சத்தியத்திற்க்கு முன்னால் சமுதாய ஒற்றுமைக்கு மார்க்கத்தில் எள்ளளவும் மதிப்பில்லை என்பதை சந்தேகமில்லாமல் அறியலாம் இனி ஒற்றுமையையும் அது போல வேறு பல காரணங்களைச் சொல்லியும் சத்தியம் இதுதான் என்று தெரிந்து கொண்டே சத்தியத்தை மறைப்பவர்களைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் பல இடங்களில் கூறுவதைப் பாருங்கள்
வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர் வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர்
மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு, (மறைத்தவற்றை) தெளிவுபடுத்தியோரைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.    அல்குர்ஆன் 2 159 160
இதில் அல்லாஹ் கூறுவது மக்களுக்கு அவர்கள் நேரான பாதையில் நடந்து இம்மை மறுமையில் வெற்றி பெறுவதற்க்கான சான்றுகளையும் நேர்வழியையும் தன்னுடைய வேதத்திலும் வேதத்தை விளக்க வந்த தூதர்களின் போதனைகளிலும் தெளிவு படுத்தி விட்டான் ஆனாலும் மக்களில் பெரும்பாலோனர் நேரான வழியில் நடக்காததற்க்குக் காரணம் அல்லாஹ் அருளிய வேதத்தைக் கற்றறிந்தவர்கள் அதைச் சரியாக மக்களுக்கு எடுத்துச் சொல்லாததும் அதில் பெரும்பாலானவைகளை மறைதத்தும் தான் காரணம் இது போன்றவர்களைத் தான் அல்லாஹ்வும் அவனது வானவர்களும் நல்ல மனிதர்களும் சபிக்கிறார்கள் அல்லாஹ்வின் சாபம் என்றால் நாம் சாதரனமாக மற்றவர்களைச் சபிப்பது போல் அல்ல மாறாக மறுமையில் கடும் தண்டனையைத்தான் அல்லாஹ் சாபம் என்கிறான் ஆம் அல்லாஹ்வின் சாபத்தைவிட ஒரு பெரிய தண்டனை தான் என்ன அதுவே மிகப் பெரிய தண்டனைதான் ஆனால் தாங்கள் இதுவரை மறைத்த சத்தியக்கருத்துக்களை மக்களுக்குத் தெளிவுபடுத்தித் திருந்திக்கொன்டோரைத் தவிர என்று அல்லாஹ் கூறுகின்றான் எனவே இது போன்ற கடும் எச்சரிக்கைகளைக் கண்ட பிறகாவது ஒற்றமை போன்ற சாக்குபோக்குகளைச் சொல்லி சத்தியத்தை மறைப்பவர்கள் திருந்திக் கொள்ளவேண்டும் இன்னும் இது போன்ற சத்தியத்தை மறைக்கக்கூடிவர்களைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் மற்றோர் இடத்தில் கூறுவது
அல்லாஹ் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர், தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர (வேறு எதையும்) சாப்பிடுவதில்லை. கியாமத் நாளில்1 அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
அவர்களே நேர் வழியை விற்று வழி கேட்டையும், மன்னிப்பை விற்று வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். நரகத்தைச் சகித்துக் கொள்ளும் அவர்களின் துணிவை என்னவென்பது!
அல்லாஹ் உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அருளியிருந்(தும் அதை மறைத்)ததே இதற்குக் காரணம். வேதத்திற்கு முரண்படுவோர் (உண்மையிலிருந்து) தூரமான முரண்பாட்டிலேயே உள்ளனர்.
அல்குர்ஆன் 2 174 175 176
இன்னும் மார்க்க அறிஞர்கள் சத்தியத்தை மறைக்கக்கூடாது என்பது மட்டுமில்லாமல் சத்தியத்தை எடுத்துச் சொல்வது அவர்களின் கட்டாய கடமை என்று அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்
அவர்களின் பாவமான கூற்றை விட் டும், தடுக்கப்பட்டதை அவர்கள் உண்பதை விட்டும், வணக்கசாலிகளும், மேதைகளும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா? அவர்கள் செய்வது மிகவும் கெட்டது.
திருக்குர்ஆன் 5 63
நபி(ஸல்) அவர்கள் இது போன்றவர்களைப் பற்றிகூறியது
யார் கல்வியைப் பற்றிக் கேட்கப்படுகின்றாறோ அவன் அந்தக் கல்வியை அறிந்திருக்கிற நிலையில்றவன் அதை மறைத்தால் அவனுக்கு மறுமையில் நெருப்பாலான கடிவாளம் இடப்படும்
அறிவிப்பவர் அபூஹூரைரா (ரலி) நூல் திர்மிதி 2573
அதுமட்டுமில்லாமல் சமுதாயம் இறைக்கட்டளையை மீறி தெளிவான வழிகேட்டில் வீழ்வதைக் கண்ட பிறகும் சத்தியத்தை எடுத்துச் சொல்லி மக்களை நேர்வழிக்கு கொன்டு வர முயற்ச்சிக்காமல் தன்னளவில் சரியாக நடந்து கொள்பவர்களையும் அவர்கள் சத்தியத்தை எடுத்துக் கூறாததால் இறைத் தண்டனை அவர்களையும் வந்தடையும் என்பதை பின் வரும் சனிக்கிழமைக்காரர்களைப் பற்றிய குர்ஆன் வசனவ்கள் தெளிவாக விளக்குகின்றன
''அல்லாஹ் அழிக்கப் போகின்ற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகின்ற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?'' என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள் ''உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின் போது) தப்பிப்பதற்காகவும், அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்)'' எனக் கூறினர்.
கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது தீமையைத் தடுத்தவர்களை (மட்டும்) காப்பாற்றினோம். அநீதி இழைத்தவர்களை அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் கடுமையாகத் தண்டித்தோம்.    திருக்குர்ஆன் 7 164 165
இந்தச் சம்பவம் நம்மை உணர்த்துவது அந்தச்சமுதாயத்திர் தீமை செய்தவர்கள் தீமையைக் கண்டும் அதை எடுத்தச் சொல்லாமல் தன்னளவில் நல்லவர்களாகா இருந்தவர்கள் நன்மையை ஏவி தீமையைத் தடுத்தவர்கள் என மூன்று விதமானவர்கள் இருந்தார்கள் அந்த நிலையில் இறைத் தண்டனை அந்தச் சமுதாயத்திற்கு இறங்கியபோது நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தவர்களை மற்றும் காப்பாற்றுகிறான் என்றால் தீமையைக் கண்டும் தடுக்காதிருப்பது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை உணரலாம் இவ்வளவிற்கும் அந்தச் சமுதாயம் செய்தது இனைவைப்பைப் போன்று கொடிய குற்றமல்ல சனிக்கிழமைகளில் மீன் படிக்கக்கூடாது அன்று முழுவதும் அவர்கள் வனக்கவழிபாடுகளில் ஈடுபட வேண்டும் அதைத் தான் அந்தச் சமுதாயத்தவர்கள் மீறினார்கள் அதைத் தடுக்காததற்கே  அந்தத் தண்டனை என்றால் இன்று நம்முடைய சமுதாயத்தில் காணப்படும் மிகப்பெரும் தீமைகளான அல்லாஹ்விற்க்கு இனைவைப்பது அவனல்லாதோரிடம் பிரார்த்தனை செய்வது அவர்களுக்கு நேர்ச்சை செய்வது இன்னும் இதுபோன்ற பாவங்களைத் தடுக்காமல் அற்ப காரணங்களைக் கூறி நன்மையை ஏவித் தீமையைத் தடுக்காமலிருக்கும் மார்க்கத்தை அறிந்த அறிஞர்களுக்கும் மற்றவர்களுக்கும் என்ன தண்டனையோ மேலும் தாம் கற்றறிந்த சத்தியக் கல்வியை மறைப்பதைப் பற்றிய இந்த இடத்தில் இரு நபித்தோழர்களின் ஒரு சிறிய வரலாற்றை நினைவுகூர்வது நன்றாக இருக்கும் (ஆதரத்திற்க்காக அல்ல) மேலே நாம் சுட்டிக் காட்டிய குர்ஆனின்
2 159 160 பற்றி அபூஹூரைரா (ரலி) அவர்கள் கூறுவதைப் பாருங்கள்
'அபூ ஹுரைரா(ரலி) அதிகமாக நபிமொழிகளை அறிவிக்கிறாரோ என மக்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்வின் வேதத்தில் இரண்டு வசனங்கள் மாத்திரம் இல்லையென்றால் நான் ஒரு நபிமொழியைக் கூட அறிவித்திருக்க மாட்டேன்' என்று அபூ ஹுரைரா(ரலி) கூறிவிட்டு, 'நாம் நேர்வழியையும் தெளிவான சான்றுகளையும் அருளி மக்களுக்காக அவற்றை வேதத்தில் நாம் தெளிவாகக் கூறிய பின்னரும் யார் அவற்றை மறைக்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் தன் அருளுக்கு அருகதையற்றவர்களாக்கி விடுகிறான். மேலும் (தீயோரை) சபிப்ப(வர்களான இறைநம்பிக்கையாளர்களும் வான)வர்களும் அவர்களைச் சபிக்கின்றனர். ஆயினும் அவர்களில் யார் (தம் குற்றங்களிலிருந்து) மீண்டு, மேலும் (தம்மைச்) சீர்திருத்தி இன்னும் (தாம் மறைத்தவற்றை மக்களுக்குத்) தெளிவுபடுத்தியும் விடுகின்றனரோ அவர்களைத் தவிர. (அவ்வாறு தம்மைத் திருத்திய) அவர்களை நான் மன்னித்து விடுவேன். நான் மிக்க மன்னிப்பவனும் அருளுவதில் அளவற்ற வனுமாவேன்" (திருக்குர்ஆன் 02:159-160) என்ற இரண்டு வசனங்களையும் ஓதிக் காட்டினார்கள்         புஹாரி 118 ஹதீஸின் சுருக்கம்
அபூஹூரைரா (ரலி) அவர்களும் நாம் நம்மளவில் சரியாக நடந்துகொள்வோம் சத்தியத்தை (ஹதீஸ்) எடுத்துச்சொல்லி ஏன் வீனான பிரச்சினைகளை விலைக்கு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தால் ஹதீஸ்களின் அறிவிப்பாளர்களிலேயே அதிகமான ஹதீஸ்களை அறிவித்திருக்கும் அபூஹூரைரா (ரலி அவர்கள் அறிவித்த 5374 ஹதீஸ்கள் நமக்கு கிடைத்திருக்குமா என்று சத்தியம் இதுதான் என்று தெரிந்து கொண்டே மறைக்கக்கூடியவர்கள் சிந்திக்கட்டும் அடுத்து முஆது பின் ஜபல் (ரலி) அவர்கள் ஒரு ஹதீஸை அறிவிக்க அவர்கள் கூறும் காரணமும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்
தன் உள்ளத்திலிருந்து உண்மையான எண்ணத்துடன் வணங்கி வழிபடுவதற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் உறுதியாக நம்பும் எவரையும் அல்லாஹ் நரகத்திற்குச் செல்ல விட மாட்டான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது 'இறைத்தூதர் அவர்களே! இச்செய்தியை நான் மக்களுக்கு அறிவித்து விடலாமா? அவர்கள் மகிழ்ந்து போவார்களே!' என்று முஆத் கேட்டதற்கு 'அவ்வாறு நீர் அறிவிக்கும் அச்சமயத்தில் (இது மட்டும் போதுமே என்று) அவர்கள் அசட்டையாக இருந்துவிடுவார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
(கல்வியை மறைத்த) குற்றத்திலிருந்து தப்புவதற்காக தம் மரணத் தருவாயில்தான் இந்த ஹதீஸை முஆத்(ரலி) அறிவித்திருக்கிறார்கள்.
நூல் புஹாரி 128
இந்தச் செய்தியை நபி(ஸல்) அவர்கள் முஆது(ரலி) அவர்களுக்கச் சொன்னவுடன் முஆது(ரலி) அவர்கள் இந்தச் செய்தியை மக்களுக்கு அறிவித்து விடட்டுமா என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு மக்கள் இது மற்றும் போதும் என்று மற்ற வணக்கவழிபாடுகளில் அசட்டையாக இருந்துவிடுவார்கள் (இதற்கு அடுத்த ஹதீஸில் மக்கள் மற்ற வணக்கவழிபாடுகள் செய்யாமல் இருந்து விடுவார்கள் என்று அஞ்சுகிறேன்) என்று காரணம் கூறியிருக்கின்றார்கள்கள் என்றால் இந்தச் செய்தி எவ்வளவு மகத்தான செய்தி என்று அறியலாம் ஆனாலும் முஆது(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் கூறிய காரனமான மக்கள் மற்ற வணக்கவழிபாடுகளில் பொடுபோக்காக நடந்து கொள்வார்களோ என்று அஞ்சி இந்த ஹதீஸை அறிவிக்காமல் இருந்திருக்கிறார்கள் ஆனாலும் கல்வியை மறைத்த குற்றத்திலிருந்து மறுமையில் இறைவனிடம் தப்பிப்பதற்க்காக தன்னுடைய மரணத்தருவாயில் தான் இந்த ஹதீஸை அறிவித்திருக்கிறார்கள் என்றால் நபித்தோழர்கள் தமக்குத் தெரிந்த சத்தியக் கல்வியைப் பரப்புவதில் எவ்வளவு அக்கறை கொண்டிருந்தார்கள் கல்வியை மறைப்பதற்க்கு எந்த அளவிற்க்கு அஞ்சியிருக்கிறார்கள் என்பதை இவ்விரு உதாரணங்கள் மூலம் அறியலாம் நபித்தோழர்களும் ஹதீஸ்கள் நூற்களாக கொடுக்கப்படும் வரை அதைத் தலைமுறை தலைமுறையாக இரண்டு நூற்றான்டுகள் வரை பாதுகாத்து வந்த நன்மக்களும் இன்று சத்தியக்கல்வியைக் கற்று அது மக்களின் கொள்கைகளுக்கு எதிராக இருப்பதால் அதை எடுத்துச் சொல்லவேண்டாம் என்று இவர்கள் நினைப்பதைப் போல அந்த நன்மக்களும் நினைத்திருந்தால் இன்று நம் கைவசம் உள்ள லட்சக்கனக்கான ஹதீஸ்கள் நம்மை வந்தடைந்திருக்குமா என்று மார்க்க அறிஞர்கள் என்று தம்மைச் சொல்லிக் கொள்பவர்கள் சிந்தித்து இனியாவது மார்க்த்தை அதன் தூயவடிவில் எடுத்துரைக்க வேண்டும்  மேலும் நபி(ஸல்) அவர்கள் மார்க்க அறிஞர்களுக்கச் சொல்லியுள்ள ஓர் அழகிய உதாரனத்தை இந்த இடத்தில் சொல்வது மிகவும் நல்லது
'அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்று ஏராளமான புற்களையும் செடி, கொடிகளையும் முளைக்கச் செய்தன. வேறு சில தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர்; (தம் கால் நடைகளுக்கும்) புகட்டினார்; விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை; புற்பூண்டுகளை முளைக்க விடவுமில்லை. இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும் நான் கொண்டு வந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர் வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நூல் புஹாரி 79
நபி(ஸல்) அவர்கள் மார்க்க அறிஞர்களுக்குக கூறிய இந்த உதாரனத்தை மார்க்த்தைக் கற்றுள்ள மார்க்க அறிஞர்கள் ஒவ்வொருவரும் நாம் நபி(ஸல்) அவர்கள் கூறிய மார்க்கத்தைக் கற்று பிறருக்கும் கற்றுக்கொடுக்கும் நல்ல நிலங்களைப் போல உள்ளோமா அல்லது மழையை உறிஞ்சிக்கொண்டு ஒரு பயனுமளிக்காத தரிசு நிலங்களைப் போல உள்ளோமா என்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள் அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக
அல்லாஹ் மிக அறிந்தவன்
             

September 11, 2011

சத்தியத்தை மறுப்பதும் மறைப்பதும் தொடர் 1


ஏக இறைவனின் திருப்பெயரால் 
. நம்பிக்கை கொண்டோர் ஒட்டு மொத்தமாகப் புறப்படக் கூடாது. அவர்களில் ஒவ்வொரு கூட்டத் திலிருந்தும் ஒரு தொகையினர் மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதற்காகவும், தமது சமுதாயத்திடம் திரும்பிச் செல்லும் போது அவர்களை எச்சரிப்பதற்காகவும் புறப்பட்டிருக்க வேண்டாமா? அவர்கள் (இதன் மூலம் தவறிலிருந்து) விலகிக்கொள்வார்கள்                 அல்குர்ஆன்  9 122
மேலே உள்ள குர்ஆன் வசனம் மூலம் மார்க்க்க் கல்வியை கற்பதற்க்கு அல்லாஹ் கூறும் காரனம் மக்களை எச்சரிப்பதற்க்காகவும் அதன் மூலம் மக்கள் நேர்வழியை அடையக்கூடும் எனபதற்க்காத்தான் அல்லாஹ்வின் இந்த கட்டளையின் அடிப்படையில் முஸ்லீம்களில் கனிசமான ஒரு தொகையினர் மார்க்கக் கல்வியைக் கற்றும் கற்றுக்கொடுத்தும் கொண்டு இருக்கின்றனர் ஆனால் மேலே நாம் சுட்டிக்காட்டிய குர்ஆன் வசனத்தில் அல்லாஹ் கூறும் காரனத்திற்க்காக கற்கின்றார்களா என்றால் பெரும்பாலோனர் இதற்க்காக கற்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும் சொல்லவும் முடியும் அப்படி என்றால் வேறு என்ன காரணம் இவர்கள் மார்க்கத்தைக் கற்பதற்க்கு  என்று இவர்கள் விளங்கி வைத்திருப்பெதெல்லாம் பள்ளிவாசல்களில்  தொழுகைக்கு இமாமத் செய்யவும் திருமணம் என்று சொன்னால் நிகாஹ் ஓதவும் ரபியுல்அவ்வல் மாதம் வந்து விட்டால் பள்ளியிலும் வீடுகளிலும் மவ்லீது ஓதவும் இறந்த வீடு திருமண வீடுகளில் சென்று அல்பாத்தஹா ஓதுவதற்காகவும் தான் இதுதான் தமிழகத்தில் பெரும்பாலான ஆலிம்களின் இன்றைய நிலை ஆனால் மார்க்க அறிஞர்களின் கடமையாக அல்லாஹ் கூறுவது 
 அவர்களின் பாவமான கூற்றை விட்டும், தடுக்கப்பட்டதை அவர்கள் உண்பதை விட்டும், வணக்கசாலிகளும், மேதைகளும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா? அவர்கள் செய்வது மிகவும் கெட்டது       அல்குர்ஆன் 5 63
இந்த வசணத்தின் மூலம் மார்க்க அறிஞர்களின் கடமையாக அல்லாஹ் கூறுவது மனிதர்கள் பாவங்கள் செய்வதிலிருந்தும் அல்லாஹ்வின் கட்டளைகளை மீறும்போதும் அவர்களைத் தடுக்கவேண்டும் என்பதுதான் ஆனால் இன்று முஸ்லீம் சமுதாய ஆலிம்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்பவர்கள் முஸ்லீம்கள் பாவம் செய்யும்போதும் இறைக்கட்டளையை மீறும் போதும் அவர்களை அல்லாஹ்வும் அவனுடைய தூதர் நபி ஸல் அவர்களும் சொன்ன அடிப்படையில் தடுக்கின்றார்களா என்றால் இல்லை அதுவும் மக்களிடம் காணப்படும் மிகப்பெரும் பாவமான அல்லாஹ்விற்க்கு இனைவைத்தல் அவனல்லாதோரிடம் பிராத்தித்தல் போன்ற பெறும் பாவங்களை கண்ட பிறகாவது தடுக்கின்றார்களா என்றால் இல்லை என்று சொல்வதுடன் இதுபோன்ற பாவங்களை செய்யுமாறு மக்களை ஊக்குவிப்பதும் அதை நியாயப்படுத்தவும்தான் செய்கிறார்கள் இதற்கெல்லாம் காரணம் மார்க்கத்தை அதன் தூய வடிவில் இவர்கள் கற்கவுமில்லை கற்றுக்கொடுக்கவுமில்லை என்பது தான்  இன்று தமிழகத்தில் உள்ள ஆலிம்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம் எந்தவொரு ஆலிமாக இருந்தாலும் இந்த நான்கு வகையினுல் ஏதாவது ஒரு வகையினாரக வந்து விடுவார்கள் முதலாம் வகையினர் சத்தியம் இதுதான் என்று தெரிந்த பின்னும் தங்களுடைய கொள்கைகளுக்கு எதிராக இருக்கிறது என்பதனாலும் தங்களுடைய வருமானம் போய்விடும் என்பதனாலும் தங்களுடைய தலைமைக்காகவும் நியாயமற்றக் காரணங்களைக் கூறி சத்தியத்தைக் கடுமையாக மறுப்பதும் சத்தியத்தை எடுத்துச் சொல்பவர்களுக்கெதிராக அவதூறைப் பரப்புவதும் அவர்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுபவர்கள் இரண்டாம் வகையினர் சத்தியம் இதுதான் என்று தெளிவாக தெரிந்த பின்னும் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கும் ஆசிரிய ஆலிம்களுக்கும் வேலை போய்விடும் போன்ற காரணங்களுக்கு பயந்துகொண்டு தனது மனதிற்க்கு விரோதமாக சத்தியத்தை மறைப்பவர்கள் மூன்றாம் வகையினர் சத்தியம் எது அசத்தியம் எது யார் சொல்வது உண்மை யார் சொல்வது பொய் குழப்பத்தில் உள்ளவர்கள் நான்காம் வகையினர் யாருக்கும் அஞ்சாமல் அல்லாஹ்விற்க்கு மட்டும் பயந்து மக்களை நிரந்தர நரகத்திலிருந்தும் பெரும் பாவங்களில் இருந்தும் காக்க வேண்டும் என்பதற்காக இஸ்லாத்தை அதன் தூயவடிவில் எடுத்துரைப்பவர்கள் முதலில் முதலாம் வகையினறைப் பற்றிப் பார்போம்
சத்தியத்தை மறுப்பவர்கள் 
தமிழகத்தில் முஸ்லீம்களிடையே தவ்ஹீத் என்ற வார்த்தைகூட அறிமுகமில்லாத காலகட்டத்தில் முதன்முதலாக தவ்ஹீதை எடுத்துச் சொன்ன போது  மிக மிகக் கடுமையாக எதிர்த்தவர்கள் இந்த ஆலிம்கள் தான் அதிலும் குறிப்பாக அரபு மதரஸாக்களிலே தலைமை ஆசிரியர்களாக இருந்த மிகப் பெரிய ஆலிம்களும் ஜமாத்துல்உலமாவில் உள்ள ஆலிம்கள்தான் அதிகம் இவர்கள் சாதாரன மக்களையும் பள்ளிவாசல் நிர்வாகிகளையும் தூன்டிவிட்டு கொலைவெறித்தாக்குதல் கூட நடத்தியிருக்கின்றார்கள் இன்றளவும் சில இடங்களில் தவ்ஹீத்வாதிகளுக்கு ஊர்விலக்கு சுன்னத்தான அடிப்படையில் தொழ பல பள்ளிகளில் தடை பிரச்சாரம் செய்யத் தடை என்றெல்லாம் உள்ளது தமிழகத்தில் முஸ்லீம்களுடையே புரையோடுப்போயிருந்த தர்கா வழிபாட்டைத்தான் தவ்ஹீத் ஆலிம்கள் முதன் முதலில் எதிர்த்தது அல்லாஹ்விற்கு இனைவைக்க கூடிய பெரும்பாவமான இந்தக் காரியத்தைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் கூறும்போது
 தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.    அல்குர்ஆன் 4 48
இன்னும் திருக்குர்ஆனின் பல இடங்களில் அல்லாஹ்விற்கு இனை வைப்பவர்களுக்கு நிரந்தர நரகம் என்று கூறப்பட்டிருக்கின்றது
 தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.                                           அல்குர்ஆன் 4 116
இந்த இனைவைப்பைப் பற்றி நபி ஸல் கூறியது
. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். 
நான் நபி(ஸல்) அவர்களிடம், 'அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது' என்று கூறினார்கள். நான், 'நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம் தான்' என்று சொல்லிவிட்டு, 'பிறகு எது?' என்று கேட்டேன். 'உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது' என்று கூறினார்கள். நான், 'பிறகு எது?' என்று கேட்க, அவர்கள், 'உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபசாரம் செய்வது' என்று கூறினார்கள்
.        புஹாரி 4477
ஆக இவ்வளவு மகா பாவமான காரியத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் அவர்கள் நிரந்தர நரகத்திற்குரியவர்களாக ஆகிவிடக்கூடாது என்று தவ்ஹீத் ஆலிம்கள் களமிறங்கிய போது தர்கா வழிபாடு கூடும் அங்கு அடங்கியிருக்கும் மகான்களிடம் பிரார்த்திக்கலாம் என்று குர்ஆன் வசனங்களுக்கு தப்பும் தவறுமாக விளக்கம் கூறி அதை நியாயப்படுத்தினார்கள் இன்றளவும் அதற்காக வாதாடிக்கொண்டிருக்கிறார்கள்  அடுத்த்து மவ்லித் பாடல்கள் இந்த மவ்லித்களில் தான் எத்தனை எத்தனை ஷிர்க்கான வார்த்தைகள் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜெய்லானி அவர்களையும் நாகூர் ஷாகுல்ஹமீது பாதுஷா அவர்களையும் ஏன் நபி ஸல் அவர்களையும் கூட அல்லாஹ்விற்கு நிகராக புகழ்ந்து அழகு பார்க்கிறார்கள் அல்லாஹ்வை நேசிப்பதைவிட அவர்களை அதிகம் நேசிக்கறார்கள் இத்தகையோரை அல்லாஹ் தன் திருமறையில் {காபிர்கள்} இறைமறுப்பாளர்கள் என்று கூறுகின்றான்
(என்னை) மறுப்போர் என்னையன்றி எனது அடியார்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ள நினைக் கிறார்களா? (நம்மை) மறுப்போருக்கு நரகத்தைத் தங்குமிடமாக நாம் தயாரித்துள்ளோம்  அல்குர்ஆன் 18 102
இப்படியெல்லாம் அல்லாஹ் கூறிய பிறகும் இம்மாபெரும் பாவத்தை நியாயப்படுத்திக்கொண்டும் இன்னும் அல்லாஹ்வை மட்டும் வணங்கப்பட வேண்டும் என்று கட்டிய அவனது பள்ளிகளிலும் இன்னும் வீடுகளிலும் இதை தங்கள் வயிற்றுப்பிழைப்புக்காக அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் இது போன்ற மார்க்க்க் காரியங்கள் ஒவ்வொன்றையும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டிய வழியில் செய்ய விடாமல் அறிவின்றி தாங்களும் வழிகெட்டு மற்றவர்களையும் வழிகெடுக்கக் கூடியவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறும் எச்சரிக்கையை கேட்டு நரகத்திற்கு அஞ்சி இனியாவது அவர்கள் திருந்திக்கொள்ளட்டும்
. கியாமத் நாளில்1 முழுமையாகத் தமது சுமைகளையும், அறிவின்றி யாரை இவர்கள் வழி கெடுத்தார்களோ அவர்களின் சுமைகளையும் சுமப்பதற்காக (இவ்வாறு கூறுகின்றனர்) கவனத்தில் கொள்க! அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது          அல்குர்ஆன் 16 25
''ஒவ்வொரு பாதையிலும் (மக்களை) மிரட்டுவதற்காக அமராதீர்கள்! அல்லாஹ்வின் பாதையைக் கோணலாகச் சித்தரித்துநம்பிக்கை கொண்டோரை அதை விட்டும் தடுக்காதீர்கள்! நீங்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்ததையும்உங்களை அவன் அதிகமாக்கியதையும் எண்ணிப் பாருங்கள்! 'குழப்பம் செய்தோரின் முடிவு எவ்வாறு இருந்ததுஎன்பதைக் கவனியுங்கள்    அல்குர்ஆன் 7 86
இன்னும் இதுபோன்றவர்களைப் பற்றி நபி ஸல் அவர்கள் கூறுவதைப் பாருங்கள்
 'நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:            என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்
நூல் புஹாரி 100

அல்லாஹ் மிக அறிந்தவன்