June 03, 2014

முஸ்லீம்களுக்கு எதிரான ஊடகபயங்கரவாதத்தை எதிர்கொள்ள ஒரே வழி


இன்றைய ஊடகங்கள் அவை அச்சாகட்டும் காட்சி ஊடகமாகட்டும் பெரும்பாலும் அவை எல்லாமே ஏதாவது பக்கச்சார்புடையவைகளாத்தான் உள்ளது அதனால் தான் தனக்கு வேண்டாத நாட்டுக்கோ கட்சிக்கோ தலைவர்களுக்கோ அல்லது மதத்திற்க்கோ சாதகமான செய்திகளையெல்லாம் இருட்ட்டிப்புச் செய்வதும் எதிர்மறையான விடயங்கள் கிடைத்துவிட்டால் அதை தலைப்புச்செய்தியாகவும் ப்ளாஸ் நியுஸாகவும் வாரக்கனக்கில் ஆக்கி பொதுமக்களின் கவனத்தை அதன்பால் ஈர்ப்பதைப் பார்க்க முடிகிறது

இப்படி மேல் சொன்ன எல்லாத் தரப்பினருக்கும்  ஊடகத்துறையில் எதிரிகள் இருப்பதுபோலவே இவர்களுக்குப் பக்கச்சார்புடையவர்களும் உள்ளனர் அதனால் தான் தமக்கெதிராக ஒட்டுமொத்த ஊடகங்களும் சேர்ந்து பரப்புறை செய்யும் சில விடயங்களைத் தவிர மற்றவைகளை தங்களது பக்கச்சார்பு ஊடகங்களாலும் எழுத்தாளர்களாலும் அறிவுஜீவிகளாலும் முறியடிக்கவோ அல்லது அந்தச் செய்தியை நீர்த்துப் போகவோ செய்யமுடிகிறது

ஆனால் முஸ்லீம்களுக்கு இதுபோன்ற நிலை உலகில் எங்குமே இல்லை என்னும் அளவுக்கு உலகில் உள்ள 95 சதவீத ஊடகங்கள் முஸ்லீம்களுக்கு எதிராகத்தான் உள்ளது அதனால்தான் ஒட்டுமொத்த மீடியாக்களும் சேர்ந்து கொண்டு இஸ்லாத்திற்க்கும் முஸ்லீம்களுக்கும் எதிரான பொய்யான செய்திகளை வெகுஜன மக்களிடம் எளிதாகப் பரப்பி விடுகின்றனர் சாதாரன மக்களும் அதை அப்படியே நம்பி விடுகின்றனர்

இந்த நிலை மாறவேண்டும் என்றால் உலகில் உள்ள எல்லா முக்கிய மொழிகளிலும் குறிப்பாக மாற்றுமதத்தவர்களுடன் முஸ்லீம்கள் கலந்து வாழக்கூடிய நாடுகளில் உள்ள மொழிகளில் நமக்கென்று அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் வேண்டும் அந்தந்த மொழிகளில் உள்ள முன்னனி மீடியாக்கள் அளவுக்கு இல்லையென்றாலும் மூன்றாம் நான்காம் நிலையிலாவது அவை பிரபலமானாதாக இருக்கவேண்டும் இனி இதைவிட முக்கியமாக உலக அளவில் நியூஸ் ஏஜென்ஸிகளும் இருக்கவேண்டும் காரணம் பிபிசி போன்ற பலம் வாய்ந்த சில மீடியாக்களைத் தவிர மற்ற மீடியாக்கள் எல்லாமே இதுபோன்ற நியூஸ் ஏஜென்ஸிகளிடமிருந்து தான் செய்திகளை வாங்குகின்றன
                    
                         அல்ஜசிரா
உலக அளவில் மீடியாத்துறையில் முஸ்லீம்களின் இயலாமை நிலைக்கு சற்று ஆறுதல் வழங்கும் வகையில் அமைந்தது தான் அல்ஜசீரா எனும் மீடியா இது மிகச்சமீபமாக 1996 ம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் தன்னுடைய சேவையைத் துவங்கியது என்றாலும் இன்று உலகில் அதிகமான மக்களால் உற்றுநோக்கப்படும் முக்கியமான 5 செய்திச் சேனல்களில் அல்ஜசீராவும் ஒன்றாகும் இது ஈராக் மற்றும் ஆப்கானில் அமெரிக்க நடத்திய ஆக்கிரமிப்புப் போரைப் பற்றி வேறெந்த மீடியாக்களும் வெளியிடாத சில தகவல்களை வெளியிட்டு அமெரிக்காவிற்கு கோபத்தை மூட்டியது அமெரிக்காவின் வெளியுறவுச்செயலாளராக இருந்த ஹிலாரி கூட அல்ஜஸிராவைப் பற்றி கூறும்போது இதுவரை நம்மிடமிருந்த மீடியாவின் கட்டுப்பாடு சிறிது சிறிதாக நம் கையை விட்டு நழுவுவதாக நினைக்கிறேன் என்றார்

உன்மையில் இங்கிலாந்தின் பிபிசி அமெரிக்காவின் CNN போன்ற செய்தி ஜாம்பவான்கள் மறைக்கும் இஸ்லாம் மற்றும் முஸ்லீம்களைப் பற்றிய நேர்மறையான கருத்துக்களை வெளி உலகுக்கு கொண்டு செல்வதிலும் மேற்படி மீடியாக்களால் ஊதிப் பெருப்பிக்கப்படும் இஸ்லாத்திற்கெதிரான எதிர்மறையான அவதூறுகளையும் பொய்களையும் கலைந்து அந்தச் செய்தியின் உண்மை நிலையை உலகுக்கு எடுத்துச் சொல்வதில் அல்ஜஸிரா ஓரளவுக்கு வெற்றி பெற்றுள்ளது சமுதாயம் சார்ந்த செய்திகளை அல்ஜஸீராவிடமிருந்து பெற்று எங்கெல்லாம் முஸ்லீம் ஊடகங்கள் வெளியிடுகிறதோ அங்கும் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது ( உதாரணமாக கேரளா போன்று) கேரள முஸ்லீம் ஊடகங்கள் பற்றிய முந்தைய பதிவு தூது ஆன்லைன் போன்ற தளங்கள் கேரள பத்திரிக்கைகளில் வருவதைத் தான் மொழிபெயர்த்து வெளியிடுவது குறிப்பிடத்தக்கது
                              இறுதியாக
இன்றைய முஸ்லீம்களுக்கு எதிரான ஊடக பயங்கரவாதத்தை எதிர்கொள்ள ஒரே வழி உலகெங்கும் முஸ்லீம்களும் ஊடகத்துறையில் குறிப்பிடும் அளவுக்கு பங்கு பெற வேண்டும் இப்போது முஸ்லீம் இயக்கங்களுக்கு வார மாத இதழ்கள் உள்ளது போல் ஜனரஞ்சகமான தினசரிகளையும் செய்தி சேனல்களையும் துவங்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் அதில் சினிமா போன்ற ஆபாச செய்திகளைத் தவிர்த்து விட்டு நேர்மையான நடுநிலையுடன் கூடிய செய்திகளையும் வெளியிடுவதின் மூலம் மாற்று மத மக்களிடமும் நல்ல வரவேற்பு உள்ள வெகுஜன ஊடகமாக அதை மாற்றமுடியும் அல்ஜஸிரா இப்படித்தான் குறுகிய காலத்தில் வளர்ந்தது இதைச் செய்ய தவறும் பட்சத்தில் இன்று அதிகமான மாற்று மத மக்களிடம் இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லீம்கள் பற்றியும் வெறுப்பையும் கருத்தியல் ரீதியாக தவறான புரிதல்களையும் விதைத்து விட்ட மீடியாக்கள் தடையின்றி இந்த வேலையைத் தொடர்ந்து செய்து நாளை ஒட்டுமொத்த மாற்ற மதத்தவர்களிடமும் இப்படிப்பட்ட கருத்துக்களை விதைத்துவிடும் அப்படி நடக்கும் பட்சத்தில் அது முஸ்லீம்களுக்கு மிகப்பெரும் பின்னடைவாகவும் நம்மவர்களின் வாழ்வாதாரத்தைதேயே கேள்விக்குறியக்கிவிடும் அளவுக்கு மோசமானாதக ஆக்கிவிடும்


எனவே முஸ்லீம்களுக்கு எதிரான ஊடகபயங்கரவாதத்தை எதிர்கொள்ள உலக அளவில் நம்முடைய சமுதாயமும் அந்தத் துறையில் முன்னேறுவதுதான் ஒரே வழி             

April 03, 2014

முஸ்லீம் இயக்கங்களின் கொள்கை அரசியலுக்கு முன்பும் பின்பும்

முஸ்லீம் இயக்கங்களின் கொள்கை அரசியலுக்கு முன்பும் பின்பும் 
பல்லினச்சமூக மக்கள் வாழும் இந்தியாவில் ஒரு முஸ்லீம் தன்னுடைய இஸ்லாமிய கோட்பாட்டில் உறுதியுள்ள நிலையில் அரசியல்வாதியாக செயல்பட முடியும் என்பது நெருப்பின் மீது நடப்பதற்க்குச் சமம் ஒன்று அரசியலைத்துறக்கவேண்டும் அல்லது இஸ்லாத்தின் கோட்பாடுகளில் சில விட்டுக்கொடுப்புகளைச் செய்யதுதான் ஆகவேண்டும்         

தமிழக முஸ்லீம் அரசியல்வாதிகள் செய்துகொண்டிருக்கும் அடிக்கல் நாட்டுவது தொடங்கி மாற்றுமத பன்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்வது இறுதியில் சாமியார்களின் கால்களில் விழுவதுமாக இறுந்து இப்போது கோயிலிலுக்குச் சென்று  வழிபடுமளவிற்க்கு கீழ்த்தரமாக வந்துவிட்டதையெல்லாம்  இதறக்கு ஆதாரமாக சொல்லலாம் 
                        ஜமாத்தே இஸ்லாமி
 கேரளாவிலும் இலங்கையிலும் வட மாநிலங்கல் சிலவற்றிலும் வலுவான நிலையில் உள்ளதும் தமிழகத்தில் சாதாரன முஸ்லீம்களால் அதிகம் அறியப்படாததுமான ஜமாத்தே இஸ்லாமி அதன் நிறுவனர் மவ்தூதி காலம்முதலே இந்திய அரசியலை ஹராம் என்றும் ஓட்டுப்போடுவது என்பது (தாகூத்) தீய சக்திகளை தேர்ந்தெடுக்கும் வேலை என்றும் இந்திய அரசின்கீழ் வேலைபார்ப்பதும் அது தரும் கல்வியை கற்பதும் நமக்கு ஹராமானது மொத்தத்தில் ஜனநாயகம் என்பது ஷிர்க் என்ற நிலைபாட்டில்தான் இருந்தது
அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்ற குர்ஆனின் கூற்றுப்படி ஒரு பரிபூரன இஸ்லாமிய ஆட்சியைத் தவிர வேறெந்த ஆட்சியிலும் பங்கப்பெறுவதும் அதற்க்கு கட்டுப்படுவதும் இறைநிராகரிப்பு என்று அரசியல் கட்சி ஆரம்பிக்கும்வரை சொல்லிக்கொண்டிருந்த ஜமாத்தே இஸ்லாமி இறுதியில் இதுவரை ஜனநாயகம் ஒரு இறைநிராகரிப்பு என்று நாங்கள் சொல்லிவந்தது மார்க்க அடிப்படையில் தவறு என்று விளங்கியதால் அந்த வாதத்தை வாபஸ் பெறுகிறோம் என்று சொல்லி நிறுத்தாமல் இதுநாள் வரை எந்த ஜனநாயக முறையை ஷிர்க் என்று சொன்னார்காளோ அந்த ஜனநாயகத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து உங்களின் பொன்னான வாக்குகளை எங்களுக்குப் போடுங்கள் என்று ஓட்டுப்பொருக்கிகளாக வலம் வருவதுதான் மிகப்பெரிய வேதனை தான்
                               வெல்பயர் கட்சி
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தினால் இந்திய அளவில் ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான் வெல்பயர் பார்ட்டி அதுநாள் வரை அதிகாரம் அல்லாஹ்வுக்கே  என்று கோஷமிட்ட ஜமாத்தே இஸ்லாமி தான் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்ததும் இதற்க்கு நேரெதிராக நடக்கத் தொடங்கிவிட்டது ஆம் அய்யர் ஒருவரால் காயத்ரி மந்திரம் உச்சரிக்கப்பட்டுதான்  அவர்களின் கட்சியே ஆரம்பிக்கப்பட்டது தொடக்கமே இப்படி என்றால் மீதத்தைச் சொல்லவே தேவையில்லை 
                        த மு மு க 
முழுக்கமுழுக்க தவ்ஹீத்வாதிகளின் உழைப்பால் வளர்த்தெடுக்கப்பட்ட தமுமக ஆரம்ப காலத்தில் தவ்ஹீத் பிரச்சாரத்தை மக்களுக்கு கொண்டு செல்ல உறுதுனையாக இருந்த தமுமுக அதில் உள்ள சிலரின் உள்ளத்தில் ஷைத்தான் போட்ட அரசியல் ஆசையினால் எந்தக்கொள்கை பிரச்சாரம் தம்மை நீர்விட்டு வளர்த்ததோ அந்தக் கொள்கை தான் எங்களின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது என்று எழுதிக்கொடுக்குமளவிற்க்கு துனிந்து  இன்று அதே தவ்ஹீத் கொள்கையை  நஞ்சாய் வெறுக்குமளவிற்க்கு அவர்களைக் கொன்றுசென்றுள்ளது இந்த அரசியல் ஆசை இந்த கேடுகெட்ட அரசியல் ஆசை வந்ததற்க்கு பிறகு நிகழ்ந்த தமுமுக வின் சில கொள்கை மாற்றங்கள்
தான் வளரக்காரணமான கொள்கைதான் தன்னுடைய வளர்ச்சிக்கு தடையாக உள்ளது என்று சொல்லவைத்தது
அல்லஹ்வின் மீது ஆனையாக அரசியலுக்கு நாங்கள் வரமாட்டோம் என்று சொன்னவர்கள் அந்த சத்தியத்தை மீறியது
எங்களின் நோக்கம் சமுதாய சேவைதானே தவிர பதவிகளைப் பெறுவதல்ல என்றவர்கள் அற்பமான வாரியப்பதவியை வாங்கிகொண்டது
 கந்தூரிக்கும் மவ்லிதிற்க்கும் எதிராக எழுதிய தமுமுக அறிவிப்புப் பலகைகளும் அடிக்கப்பட்ட நோட்டீஸ்களும் இவைகளுக்கு வசூல் செய்வதற்க்கும் வாழ்த்துச் சொல்வதற்க்கும் பயன்படத்தொடங்கியது
சுன்னத்வல் ஜமாத்தினர் கூட சகித்துக்கொள்ளமுடியாத அளவிற்க்கு ஜோதிபாசவின் படத்திற்க்கு அஞ்சலி செலுத்தியது திருவாடுதுறை ஆதினத்திடம் ஆசி வாங்கியது
சமுதாய மானம்காக்கப் புறப்பட்ட இவர்கள் தங்களின் கூட்டனிக்கட்சிகளின் தலைவர்களை வானலாவப் புகழ்ந்து சமுதாய மானத்தைச் சந்தி சிரிக்கவைத்தது
சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் முஸ்லீம்களின் குரல் ஒலிக்கவேண்டும் என்று கட்சி ஆரம்பித்து முஸ்லீம்களின் குரல்வலையை நெறிக்கத்துடிக்கும் பஜக வின் தலைவருடன் மேடையில் கைகோர்த்தது aஅர்களுடன் சேர்ந்து ரிப்பன் வெட்டி திறப்பு விழா கொண்டாடியது
மாற்றுமதக் கலாச்சாரமான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டியது
தன்னுடைய தொகுதியில் உள்ள ராமேஸ்வரத்தை இந்துக்களின் புனிதத்தமாக அறிவிக்கவேண்டும் என்று சொல்லி ஷிர்க்கிற்க்குத் தூபம் போட்டது
மற்ற கட்சிகளுக்கு நாங்களும் ஒன்றும் சலைத்தவர்கள அல்ல என்று இறுதியில் சமுதாயத்தில் கட்அவுட் கலாச்சாரத்தைப் புகுத்தியது
இவ்வுலக அற்ப பதவிகளுக்காக தங்களை உலகுக்கு அறிமுகப்படுத்திய தவ்ஹீத் கொள்கைதான் தங்களின் முதல் எதிரி என்று நினைத்துச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் இவர்கள் பதவி வெறிக்காக இதே நிலையைத் தொடர்ந்தால் இன்று தவ்ஹீத் கொள்கையைதான் எங்களின் வளர்ச்சிக்குத் தடை என்று எழுதிக்கொடுத்தவர்கள் நாளை ஜமாலியின் கொள்கைக்குட்பட்ட இஸ்லாத்தைக்கூட இது எங்களின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது என்று எழுதிக்கொடுக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை 


SDPI பாப்புலர் பிரன்ட்&கேம்பஸ் பிரன்ட்& உமன்ஸ் பிரன்ட்& இமாம் கவுன்ஸில்&etc 


ஆரம்பத்தில் MNP யாகவும் வெளியில் விடியல்வெள்ளி என்றும் அறியப்பட்டு இருந்த இவர்கள் தங்கள் இயக்கத்திற்க்கு ஆள் பிடித்தபோது குரானிலும் ஹதீஸிலும் வரக்கூடிய சில செய்திகளுக்கு தவறான அர்த்ததைச் சொல்லி இவர்கள் செய்வது எல்லாம் மார்க்கம் காட்டிய அடிப்படையில்தான் என்று நம்பவைத்தனர் பாபர் மசூதி இடிப்பு கோவைக்கலவரம் போன்றவற்றினால் ஒட்டுமொத்த சமுதாயத்தின் சிந்தனைப்போக்கும் மாறியிருந்த நிலையில் சிந்தனையை விட உனர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்த சில இளைஞர்கள் இவர்கள் விரித்த மாய வலையில் விழுந்தனர் தனக்கான எந்தக் கொள்கையுமே இல்லாமல் தன்னுடைய எதிரிகளின் கொள்கைகளைச் சொல்லியே வளர்ந்த ஒரே இயக்கம் நமக்குத் தெரிந்து இவர்களாகத்தான் இருக்கும் 

எனவே கொள்கை அடிப்படையில் இவர்களை எதைச் சொல்லி விமர்சிப்பது என்று நானும் நீண்ட நேரம் சிந்தித்துப் பார்த்தும் கூட ஒரு குறிப்பையும் எடுக்க முடியவில்லை காரணம் இவர்கள் அன்று MNP யாக இருந்து இன்று SDPI யாக பரினமித்தது வரை இவர்களுக்கென்று மார்க்கத்திலும் சரி அரசியலிலும் சரி எந்தவொரு நிலையான கொள்கையும் இருந்ததில்லை 
மார்க்க மஸாயில்களைப் பொறுத்தவரை பவல் அடியார் சொன்னதுபோல் அந்தந்த இடத்திற்க்குத் தகுந்தாற்போல் மாறிக்கொள்வார்கள் உதாரனமாக தவ்ஹீத்வாதிகளிடம் தவ்ஹீத்வாதிகளைப் போலும் சன்னத்வல் ஜமாத்தினரிடம் சுன்னத்வல் ஜமாத்தினரைப் போலும் இஹ்வானிய சிந்தனை உள்ளவர்களிடம் இவர்களும் அந்த சிந்தனை உள்ளவர்கள் போலும் கான்பித்துக் கொள்வார்கள்

மார்க்த்தில்தான் இப்படி ஆனால் அரசியலைப் பொருத்தவரை இவர்கள் ஓரளவுக்குத் தெளிவான நிலைபாட்டில்தான் உள்ளனர் அதாவது எல்லாக் கட்சிகளிடமும் சீட் கேட்பது எந்தக்கட்சி சீட் தந்தாலும் அவர்களை ஆதரிப்பது அப்படி யாரும் தரவில்லை என்றால் பாசிசத்தை எதிர்க்கிறோம் என்று தனியாகப் போட்டி போட்டியிடுவது 

இப்படி கொள்கை குன்றுகாளாகத் திகழும் இவர்களை எப்படி கொள்கையைச் சொல்லி விமர்சிப்பது என்பதால் தான் எந்த விமர்சனமும் செய்யவில்லை


March 06, 2014

கன்னேரு பற்றிய ஹதீஸ் உன்மையா


             கன்னேரு பற்றிய ஹதீஸ் உன்மையா

கன்னேரு என்ற நம்பிக்கை உண்டு அதன் மூலம் ஒருவரது அழகையோ உடல் ஆரோக்கியத்தையோ அல்லது வேறு ஏதாவது தனிச்சிறப்பபைப் பற்றியோ ஓருவர் பொறாமை கலந்த ஆச்சர்யத்துடன் பார்த்தால் அது அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்தில்  அறிவிப்பாளர் வரிசை மூலம் சரியானவையாக அறியப்பட்ட  சில ஹதீஸ்கள் உள்ளது  உண்மைதாண் ஆனாலும் குறிப்பிட்ட இந்த ஹதீஸ்களை நம்புவதன் மூலம் இஸ்லாத்தின் அடிப்படையான சில விஷயங்களிளை மறுக்கும் நிலை  ஏற்படுகிறது
உதாரனமாக நன்மை தீமை மற்றும் நோய்  போன்ற அல்லாஹ்விடமிருந்து மட்டும் வரக்கூடிய காரியங்கள் மனிதர்கள் மூலமும் நிகழும் என்ற பாரதூரமான நம்பிக்கை இதன் மூலம் ஏற்படுகிறத வெளிப்படையாக புறச்சாதனங்கள் மூலம்  இதுபோன்றவை நடந்தால் அதற்கு மார்க்க அடிப்படையில் ஆதாரம் பார்க்க தேவையில்லை ஆனால் புறச்சாதனங்கள் ஏதுமின்றி நடப்பதாக ஹதீஸ்களில் உள்ளது நாம் இதை கற்பனையாக சொல்லவில்லை புஹாரி உட்பட உள்ள ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள சில ஹதீஸ்களில் இப்படிதுதான் வந்துள்ளது இப்னு ஹிப்பானில் வரக்கூடிய ஒரு ஹதீஸில் கண்ணேறு மூலம் ஒரு நபர் குளித்துக்கொண்டிருக்கும் இன்னொரு நபரின் உடல் வனப்பைப் பார்த்து வியந்த்ததால் அவர் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துவிட்டதாக வருகிறது முஸ்லீம் 4422 என்ற என்னில் வரக்கூடிய இன்னொரு ஹதீஸில் ஒரு சிறுமியின் முகத்தில் படர்தாமரயைப் பார்த்து நபி ஸல் அவர்கள் இவளுக்கு கண்ணேரு ஏற்பட்டுள்ளது என்று கூறுவதாக வந்துள்ளது இது புஹாரியிலும் உள்ளது  இதெற்கெல்லாம் மேலாக விதியை வெல்லக்கூடிய ஒன்று இறுந்தால் அது கண்ணேறகத்தான் இருக்கும் என்றளவிற்கெல்லாம் ஹதீஸ்கள் உள்ளது எனவேதான்  அகீதாவிற்க்கு மாற்றமாக வரக்கூடிய இதுபோன்ற செய்திகளை ஏற்க்க்கூடாது என்று சொல்கிறோம்
                                                                          
இது சம்பந்தமாக நம்மை விமர்சிப்பவர்களிடம் சில கேள்விகள்                
 அறிவிப்பாளர்கள் சரியாக இருந்தாலே போதும் அந்த ஹதீஸ்களை நாம் ஏற்றுகொற்றவேண்டும் என்பவர்கள் சனதின் அடிப்படையில் மட்டுமே ஆதாரப்பூர்வமானாமக அறியப்பட்டுள்ள எல்லா ஹதீஸ்களையும் ஏற்றுக்கொள்வார்களா என்றால் கண்டிப்பாக ஏற்று கொள்ளமாட்டார்கள் காரணம் விரல்விட்டு எண்ணக்கூடிய சனது சரியாக உள்ள சில ஹதீஸ்களின் கருத்து தவறாக உள்ளது                               

உதாரணமாக  உண்மைக்கு மாற்றமாக முஸ்லீமில் உள்ள ஒரு ஹதீஸில் நபி ஸல் அவர்கள் நபியாவதற்க்கு முன்பே ஹிஜ்ரத் சென்றாதாக வந்துள்ளது       
சில ஹதீஸ்களில் கருத்துக்கள் தலைகீழாக அறிவிக்கப்பட்டுள்ளது உதாரணமாக உம்மி மக்தூம் ரலி அவர்கள் பாங்கு சொல்லும் வரை உண்ணலாம் என்று செய்தியை பிலால் ரலி அவர்கள் பாங்கு ணொல்லும் வரை என்று தலைகீழாக அறிவிக்கப்பட்டுள்ளது           

  அதேபோல் ஒரே சம்பவத்திற்க்கு விளக்கமாக உள்ள சில ஹதீஸ்கள் பரஸ்பரம் எதிரெதிர் கருத்துக்களை சொல்லக்கூடியதாக உள்ளது இவை பெரும்பாலும் அஸ்பாபுன்னுஸுல் என்று சொல்லக்கூடிய குர்ஆன் வசணங்கள் இறங்கிய காரண காரியங்களை விளக்க்க்கூடிய ஹதீஸ்களில் அதிகமாக காணலாம்         

எனவே அறிவிப்பாளர் வரிசை மட்டுமே சரியாக உள்ளது என்பதால் குர்ஆனுக்கும் எதார்த்த்திற்க்கும் மாற்றமாக வரக்கூடிய தவறான ஹதீஸ்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுதான் உண்மை                  

ஆகவே குராபிகளையும் மிஞ்சக்கூடிய வமையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை இப்படி சொன்னீர்களே ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை அப்படி சொன்னீர்களே என்று குருட்டுத்தனமாக விமர்சிக்காமல் யதார்த்தமாக சிந்தித்து உண்ணையை விளங்குவோம் இன்ஷா அல்லாஹ்                

அல்லாஹ் மிக அறிந்தவன்