October 15, 2011

காபா முன்பு சிவாலயமாக இருந்ததா Tamil Hindu தளத்திற்க்கு மறுப்பு

ஏக இறைவனின் திருப்பெயரால்
சில நாட்களுக்கு முன்  Tamil Hindu.என்ற தளத்தில் காபா முன்பு சிவாலயமாக இருந்ததா என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தனர் சீதாராம் கோயல் என்ற வடஇந்தியர் ஒருவர் எழுதிய கட்டுரையை ஜடாயு என்பவர்  தமிழிழ் மொழிபெயர்த்திருந்தார் பொதுவாகவே Tamil Hindu. என்ற தளம் பாசிச சிந்தனைகொண்டவர்களால் நடத்தப்படும் தளமாகும் இத்தளம் முஸ்லீம்களையும் கிருஸ்தவர்களையும் கம்யூனிஸ்ட்களையும் விமர்சித்து எழுதுவதையே தன் வேலையாகக் கொண்டுள்ளது அதிலும் குறிப்பாக முஸ்லீம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து எழுதுவதையே தன் முழுநேர வேலையாகக் கொண்டுள்ளது இதெல்லாம் சாதரனமாக பாசிச சிந்தனை கொண்டவர்களால் செய்யப்படும் வேலைதான் என்றாலும் குறிப்பிட்ட இந்தக் கட்டுரையில் கட்டுரையாளர் ஆய்வு என்ற பெயரில் அளவுக்கதிகமாக கற்பனை செய்து இஸ்லாத்தின் வருகைக்கு முன்பு காபா (மக்காவில் உள்ள இறையில்லம்) சிவாலயமாக இருந்தது என்றும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பிறந்த குலமான குரைஷிகுலத்தினர் காபாவில் பூஜைசெய்து கொண்டிருந்த ஹிந்துக்களாக (பிராமணர்கள்) இருந்தார்கள் என்றும் அதர்வன வேதத்தைத் திரித்துத்தான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை எழுதிக்கொண்டார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்  இதில் காபா முன்பு சிவாலயமாக இருந்தது என்பதைத் தவிர வேறெந்த விஷயத்தையும் நேரடியாக அவர் சொல்லவில்லை என்றாலும் மற்றுள்ளவர்கள் சொன்னதை இங்கே குறிப்பிட்டுள்ளதிலிருந்து அவரும் இந்தக் கருத்தைத் தான் நிறுவமுயன்றுள்ளார் என்பது தெரிகின்றது ஏனெனில் காபா முன்பு சிவாலயமாக இருந்தது என்று சொல்லிவிட்டால் மக்காவில் வாழ்ந்தவர்கள் இந்துக்கள் தான் என்றாகிவிடும் அவர்கள் இந்துக்கள் என்றால் அங்கே பிறந்த நபி(ஸல்) அவர்களும் பிறப்பால் அவர்களைச் சேர்ந்தவர்கள் தான் என்று நிறுவி விட்டால் குர்ஆனையும்  இந்துக்களின் வேதமாகிய அதர்வன வேதத்திலிருந்துதான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் காப்பியடித்துவிட்டார்கள் என்ற கருத்தை உருவாக்கிவிடலாம் என்பது தான் காபா முன்பு சிவாலயமாக இருந்தது என்ற தலைப்பின் நோக்கம் இவற்றையெல்லாம் சொன்னாலும் கூட இவை எதையும் என்னால் உறுதியாகக் கூறமுடியாது என்று கட்டுரையாளரே சொன்னதிலிருந்து இவையெல்லாமே பாசிச சிந்தனை கொண்டவர்களின் வெற்று ஊகம்தான் என்பது புரிந்துவிடும் இருந்தாலும் இந்தக்கருத்து எந்த அளவிற்க்கு தவறானாது என்பதைத் தெளிவுபடுத்தும் விதமாக இந்த மறுப்புக் கட்டுரை வெளியிடப்படுகின்றது
குறிப்பு கட்டுரையாளர் மக்காவில் வாழ்ந்தவர்களை பொதுவாக இந்துக்கள் என்று குறிப்பிட்டாலும் ஜாதி அடிப்படையில் அவர்கள் பிராமனர்களாக இருந்தார்கள் என்பதைத்தான் அழுத்தமாகச் சொல்லவருகின்றார் அதனால் நாமும் அவர்களை பிராமணர்களோடு ஒப்பிட்டே எழுதியிருக்கின்றோம் ஆதாரங்களைப் பொறுத்தவரை கட்டுரையாளர் சில ஆதாரங்களை மேற்க்கோல் காட்டினாலும் அவையெல்லாம் ஆதாரம் என்று கொள்ளக்கூடிய அளவில் இல்லை எனவே அன்றைய காலத்தில் மக்காவில் வாழ்ந்த குரைஷி குலத்தவர்களின் கடவுள் கொள்கை மற்றும் வணக்கவழிபாடுகளைப் பற்றி குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் கூறப்பட்டுள்ள சிவற்றைக் குறிப்பிட்டுள்ளோம் அவர்களைப் பற்றி அறிய குர்ஆன் ஹதீஸ்களைவிட நம்பகமான ஆதாரங்கள் வேறு தேவையில்லை என்பதாலேயே அவைகளைக் குறிப்பிட்டுள்ளோம்
சிலைவணக்கம் நடந்ததால் சிவாலயமாக இருந்ததா?
காபாவை பொறுத்தவரை ஏக இறைவனை வணங்குவதற்க்காக முதல் மனிதர் ஆதம்(அலை)அவர்களால் உலகில் கட்டப்பட்ட முதல் ஆலயமாகும் கால ஓட்டத்தில் அந்த ஆலயம் பாலடைந்து மண்ணில் புதையுண்டு போனது பின்னர் இப்ராஹிம் (அலை) அவர்களும் அவர்களின் மகன் இஸ்மாயில் (அலை) அவர்களும் சேர்ந்து இறைவனின் கட்டளைக்கேற்ப அந்த ஆலயத்தை புனரமைத்தார்கள் அப்படி அவர்கள் புனர்நிர்மானம் செய்ததிலிருந்து பல்வேறு மாறுதல்களும் இறைவணக்கம் என்ற பெயரில் கற்சிலைகளால் நிரம்பி வழிந்து .இனைவைப்பின் உச்சிக்கே சென்றிருந்தாலும் கூட இஸ்லாத்தின் வருகையிலிருந்து இன்று வரை எந்தநோக்கத்திற்க்காக அந்த ஆலயம் நிர்மானிக்கப்பட்டதோ அந்த நோக்கத்திலேயே இன்றுவரை நிலைத்திருக்கின்றது இஸ்லாத்திற்க்கு முன்பு காபா சிவாலயமாக இருந்தது என்பதற்க்கு காபாவில் சிலைகளை வைத்து வணங்கி வந்தனர் என்பதை மட்டுமே ஒரு காரணமாகக் கூறினால் சிலைவணக்கத்தைப் பொறுத்தவரை இஸ்லாமிய மார்க்கத்தையும் யூத மதத்தையும் தவிர உலகில் உள்ள எல்லா மதங்களிலுமே சிலைவணக்கம் காணப்படத்தான் செய்கிறது யூதர்களிலும் கூட சிலர் காளைக்கன்றை வணங்கியவர்களாகத்தான் இருந்திருக்கின்றனர் எனவே இஸ்லாத்தின் வருகைக்கு முன்பு காபாவில் இருந்து வந்த சிலைவணக்கத்தையும் சிலைவணக்கத்திற்க்குள் நாட்டுக்கு நாடு காலத்திற்க்குக் காலம் காணப்படும் சில ஒற்றுமைகளை வைத்து காபா முன்பு சிவாலயமாக இருந்தது என்று ஊகிப்பது தவறு
ஹஜருல் அஸ்வத் சிவலிங்கமா?
காபா முன்பு சிவாலயமாக இருந்தது என்று சொல்பவர்கள் காபாவின் ஒரு மூலையில் பதிக்கப்பட்டுள்ள ஹஜருல் அஸ்வத் எனும் கருப்புக் கல்லையும் ஒரு ஆதாரமாகச் சொல்கின்றனர் இந்தக் கருப்புக்கல் முன்பு சிவலிங்கமாக இருந்தது என்பது அவர்களின் வாதம் இது காவிச்சிந்தனை உள்ளவர்களால் இந்தியாவில் பரப்பப்படும் பொய்களிள் ஒரு பொய்தானே தவிர இதில் எந்த உண்மையும் இல்லை ஏனென்றால் சிவலிங்கத்திற்க்கும் ஹஜருல் அஸ்வத் என்ற கல்லிற்க்கும் நிறத்தைத் தவிர வேறெந்த ஒற்றுமையும் இல்லை நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்க்குப் பின் சில ஆண்டுகள் கழித்து நடந்த ஒரு சிறு யுத்தத்தில் அந்தக்கல் சேதமடைந்ததைத் தொடர்ந்து வெள்ளியின் முலாம் பூசி சரிசெய்யப்பட்டதால் அந்த நிறம் கூட சிறிய மாறுதல்களுக்குட்பட்டுப் போனது எனவே இதுவும் ஊகம் தானே தவிர வேறில்லை
மக்கா குரைஷிகளின் கடவுள்கொள்கை
நபி(ஸல்) அவர்கள் எந்தக்குலத்தில் பிறந்தார்களோ அந்தக்குலத்தவரான குரைஷிகள்தான்(மக்காவில் வாழ்ந்த அரபிகள்) மக்காவின் பூர்வகுடிகளாவார்கள் இஸ்லாத்தின் வருகைக்குப்பின் நபி(ஸல்) அவர்கள் புனித காபாவில் இருந்த சிலைகளையெல்லாம் அகற்றி அதை ஏக இறைவனை மட்டும் வணங்குமிடமாக ஆக்குவதற்க்கு முதல் நாள் வரையிலும் குரைஷிகள்தான் காபாவை நிர்வாகம் செய்து வந்தனர் அப்படிப்பட்ட குரைஷிகளின் கடவுள் கொள்கையைப் பொருத்தவரை பிராமணர்களைப் (இந்துக்கள்) போலவே இறைவன் ஏகன் என்று ஏற்றுக்கொள்ளாதவர்களாக இருந்தாலும் பிராணர்களைப் போல் எண்ணிச்சொல்ல முடியாத அளவிற்க்கு கடவுள்களை அவர்கள் வணங்கவில்லை அதிகபட்சமாக 360 சிலைகளை காபாவில் வைத்திருந்தனர் அவையெல்லாவற்றையும் கூட வணங்குவதற்க்கா வைக்கவில்லை பெரும்பாலான சிலைகளை குறிகேட்பதற்க்காகவே வைத்திருந்தனர் (சிலைகளின் முன்பு சீட்டுக்குழுக்கிப் போட்டு ஒன்றைத் தேர்வு செய்வது இறைவனே அதைத்தேர்வு செய்ததாக நம்பி ஏற்றுக்கொள்வது)அதனால் தான் எந்தச் சிலையையும் இது அல்லாஹ்வின்(அரபியில் இறைவன் என்று அர்த்தம்) சிலை என்று அவர்கள் சொல்லவில்லை அதேபோல் பிராமணர்களிடம் காணப்படும் ஆக்கும் கடவுள் காக்கும் கடவுள் அழிக்கும் கடவுள் போன்ற ஒவ்வொன்றுக்கும் ஒரு கடவுள் என்ற கொள்கையெல்லாம் இல்லாதவர்களாகவே இருந்துள்ளனர் மக்காவில் வாழ்ந்த குரைஷிகள் பல கடவுள்களை ஏற்படுத்தியிருந்ததற்க்கு அவர்கள் சொன்ன காரணம் அவைகள் எல்லாவற்றிற்க்கும் இறைவனைப் போல் ஆற்றல் உள்ளது என்பதால் அல்ல மாறாக அவை எங்களை இறைவனிடம் நெருக்கமாக்கி வைக்கும் என்பதாகத்தான் இருந்தது இதை குர்ஆனின் இக்கூற்றிலிருந்து விளங்கலாம் 
கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் 'அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை' (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். திருக்குர்ஆன் 39 3
அதுபோல் குரைஷிகள் இறைவனிடம் தங்களை நெருக்கமாக்கி வைக்கும் என்பதற்க்காக பல கடவுளகளை ஏற்படுத்தியிருந்தாலும் கூட ஆபத்தான காலகட்டங்களில் ஏக இறைவனிடம் மட்டுமே பிராத்தித்து வந்தனர் என்பதைப் பற்றி குர்ஆன் இவ்வாறு கூறுகிறது
கடலிலும், தரையிலும் அவனே உங்களைப் பயணம் செய்ய வைக்கிறான். நீங்கள் கப்பலில் இருக்கின்றீர்கள். நல்ல காற்று அவர்களை வழி நடத்துகிறது. அவர்கள் மகிழ்ச்சியடையும் போது புயல் காற்று அவர்களிடம் வருகிறது. ஒவ்வொரு இடத்திலிருந்தும் அவர்களிடம் அலையும் வருகிறது. தாம் சுற்றி வளைக்கப்பட்டு விட்டதாக அவர்கள் முடிவு செய்கின்றனர். வழிபாட்டை உளத்தூய்மையுடன் அவனுக்கே உரித்தாக்கி 'இதிலிருந்து எங்களை நீ காப்பாற்றினால் நன்றியுள் ளோராக ஆவோம்' என்று அல்லாஹ் விடம் பிரார்த்தனை செய்கின்றனர். திருக்குர்ஆன் 10 22
முகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும் போது உளத்தூய்மையுடன் வணக்கத்தை உரித்தாக்கி அவனைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றித் தரையில் சேர்த்ததும் அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை 31 32
இவ்விஷயத்திலும் அவர்களுக்கும்  பிராமணர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இருப்பதில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்
ஹஜ்ஜை நிறைவேற்றி வந்த குரைஷிகள்
இஸ்லாத்தின் இறுதிக் கடமையான ஹஜ்ஜைப் பற்றி எல்லோருக்கும் தெரியும் நபி(ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் போதிப்பதற்க்கு முன்பே மக்காவாசிகள் ஹஜ்ஜை நிறைவேற்றி வந்தனர் அப்படி ஹஜ்ஜை நிறைவேற்றக்கூடியவர்கள் இறைவனைப் புகழும் விதத்தில் காபாவில் சொல்லக்கூடிய  வார்த்தைகளை மக்கா குரைஷிகள் சொன்ன விதத்தில் இருந்தும் அவர்கள் வணங்கிய எல்லா சிலைகளுக்கும் இறைவனுடைய அந்தஸ்ததை அவர்கள் கொடுக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்
சாதரணமாகச் சொல்ல வேண்டியவை
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
"இதோ, உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன்! இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! இணையில்லாதோனே! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! புகழும், அருட்கொடையும், ஆட்சியும் உனக்கே உரியன! உனக்கு இணையானவர் எவருமில்லை." புஹாரி 1549.
இதுவே நபி(ஸல்) அவர்களின் தல்பியாவாகும்.
குரைஷிகள் சொன்ன விதம்
நான் உன் சமூகம் வந்து விட்டேன் நாயனே! நான் உன் சமூகம் வந்து விட்டேன்! உனக்கு எந்த ஒரு இணையும் இல்லை. ஒரேயொருவரைத் தவிர அவர் மாத்திரம் உனக்கு நிகரானவர்
மறுபிறவிக் கொள்கை
அதேபோல் பிராமணர்கள் (இந்துக்கள்) நம்பிக்கை வைத்துள்ள இறைவன் மனிதர்களை ஏழு ஜென்மங்களுக்கு மீண்டும் மீண்டும் படைப்பான் என்ற மறுபிறவிக் கொள்கையையும் என்னவென்றே அறியாதவர்களாகத்தான் அன்றைய மக்காவாசிகள் இருந்துள்ளார்கள்
இதெல்லாம் இஸ்லாத்திற்க்கு முன்பிருந்த மக்காவாசிகளுக்கும் பிராமணர்களுக்கும் அல்லது இந்தக்களுக்கும் இருந்த கடவுள் கொள்கை தொடர்பான வித்தியாசங்கள் சிலவாகும்
இனி மக்காகுரைஷிகள் செய்து வந்த மதச்சடங்குகள் சிலவற்றைப் பார்க்கும் போதும் இந்துக்களுக்கும் அன்றைய மக்காவில் வாழ்ந்த அரபிகளுக்கும் எந்தச்சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாகத் தெரியும்
விருத்த சேதனம் செய்தல்
உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்கள் அனைவரும் விருத்த சேதனம் (ஆண்குறியின் நுனித்தோலை வெட்டிக் கொள்வது) செய்து கொள்வதைப் பற்றி எல்லோருக்கும் தெரியும் ஆனால் இஸ்லாத்தின் வருகைக்கு முன்பிருந்தே மக்கா குரைஷிகள் விருத்தசேதனம் செய்து கொள்ளும் பழக்கம் உடையவர்களாக இருந்துள்ளனர் இதைக் கீழ்க்காணும் செய்தியிலிருந்து அறியலாம்
'இன்றிரவு நான் நட்சத்திர மண்டலத்தை ஆராய்ந்து கொண்டிருந்தபோது விருத்த சேதனம் செய்யப்பட்டவர்களின் மன்னர் தோன்றிவிட்டதாக அறிந்தேன்' என்று கூறிவிட்டு, அறிந்தேன்' என்று கூறிவிட்டு, 'இக்கால மக்களில் விருத்தசேதனம் செய்து கொள்ளும் வழக்கமுடையவர்கள் யார்?' என வினவினார். 'யூதர்களைத் தவிர வேறு யாரும் விருத்த சேதனம் செய்து கொள்வதில்லை; அவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்; உங்கள் ஆட்சிக்குட்பட்ட நகரங்களுக்கெல்லாம் எழுதி அங்குள்ள யூதர்களைக் கொன்று விடுமாறு கட்டளையிடுங்கள்' என்றார்கள். இவ்வாறு அவர்கள் உரையாடிக் கொண்டிருக்கும் போதே நபி(ஸல்) அவர்களைப் பற்றிய தகவல் ஒன்றைக் கொண்டு வந்திருக்கும் ஒரு மனிதரை 'கஸ்ஸான்' என்ற கோத்திரத்தின் குறுநில மன்னர் ஹெர்குலிஸிடம் அனுப்பியிருந்தார். அம்மனிதர் அவரின் முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டார். அவரிடம் தகவல்களைப் பெற்ற ஹெர்குலிஸ், 'இவரை அழைத்துச் சென்று இவர் விருத்த சேதனம் செய்திருக்கிறாரா? அல்லவா? சோதியுங்கள்' என்று ஆணையிட்டார். அவரை அழைத்துச் சென்று பரிசோதித்தவர்கள் அவர் விருத்த சேதனம் செய்திருப்பதாகக் கூறினார்கள். அவரிடம் அரபிகளின் வழக்கம் பற்றி மன்னர் விசாரித்தபோது, 'அவர்கள் விருத்த சேதனம் செய்து கொள்ளும் வழக்கமுடையவர்கள் தாம்' என்றார். உடனே ஹெர்குலிஸ், 'அவர் தாம் - (முஹம்மத்(ஸல்) இக்காலத்தின் மன்னராவார்; அவர் தோன்றிவிட்டார் என்று கூறினார். புஹாரி 7 ஹதீஸின் சுருக்கம்
ஆக அன்றைய அரபிகள் விருத்த சேதனம் செய்ததிலிருந்தும்  இந்துக்கள் இன்றளவு கூட விருத்தசேதனத்தைப் பற்றி அறியாதவர்களாக இருப்பதிலிருந்தும் இந்துக்களுக்கும் அன்றை அரபிகளுக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லையென்பதை புரிந்துகொள்ளலாம்
வேதங்களை அறியாதிருந்த மக்கா அரபிகள்
அதேபோல் இந்தக்களின் வேதங்கள் அவர்களுக்கெல்லாம் பொதுவானதெனச் சொல்லப்பட்டாலும் பிராமணர்கள் மட்டும் தான் அதை அறிந்துவைத்துள்ளனர் என்பதுதான் உண்மை அந்த அடிப்படையில் பல்லாண்டுகாலமாகவே பிராணர்கள் வேதத்தை அறிந்துவைத்திருக்கின்றனர் ஆனால் இஸ்லாத்திற்க்கு முன்பு மக்காவில் வாழ்ந்த அரபிகள் யாருமே வேதம் என்றால் என்ன என்பதையெல்லாம் அறியாதவர்களாகவே இருந்துள்ளனர் என்பதும் பிராமணர்களுக்கும் மக்கா குரைஷிகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை உறுதிபடுத்துகின்றது
இறைத்தூதர்களை அறிந்திருந்தார்கள்
இந்துக்கள் வேதங்களை அறிந்திருந்தாலும் இறைத்தூதர்களைப் பற்றி  ஒன்றுமே தெரியாதவர்களாகத்தான் இருக்கின்றார்கள் ஆனால் மக்கா குரைஷிகளைப் பொருத்தவரை இறைத்தூதர் இப்ராஹிம்(அலை) அவர்களின் வாரிசுகளான தாங்கள் அவருடைய மார்க்கத்திலேயே நிலைத்திருப்பதாகக் கூறினார்கள் அதனால் தான் இப்ராஹிம்(அலை) அவர்களின் வழிமுறையான ஹஜ் மற்றும் விருத்தசேதனம் போன்றவற்றைச் செய்து வந்ததோடு இறையில்லமான காபாவில் இப்ராஹிம்(அலை) இஸ்மாயில்(அலை) ஆகியோரின் சிலைகளையும் வைத்திருந்தனர் இதுவும் அன்றைய மக்காவாசிகளுக்கும் இந்துக்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்பதை நிரூபிக்கும் சான்றாகும்

புனித மாதங்களைக் கடைபிடித்தது
 
அரபு மாதங்களான ரஜப் துல்ஹாதா துல்ஹஜ் முஹர்ரம் ஆகிய மாதங்களில் போர் செய்வது தடுக்கப்பட்டுள்ளதாக அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில்  கூறுகின்றான் ஆனால் இஸ்லாத்தின் வருகைக்கு முன்பே குரைஷிகள் இந்தப் புனித மாதங்களைக் கடைபிடித்து வந்திருக்கின்றனர் ஆனால் பிராமணர்களாக இருந்தாலும் சரி இந்துக்களில் உள்ள மற்ற சாதியினராக இருந்தாலும் சரி மாதங்களில் நான்கு புனிதமானவையும் உள்ளன என்ற கொள்கையெல்லாம் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர் இதுவும் மக்கா குரைஷிகளுக்கும் பிராமணர்களுக்கும் சம்பந்தமும் இல்லை என்பதை உறுதிபடுத்துகின்றது
உயர்குலமாக இருந்ததால் பிராமணர்களாக இருந்தார்களா?
இந்தியாவில் பிராமணர்கள் உயர்சாதியினராக உள்ளனர் அதுபோல் மக்காவில் குரைஷியரும் உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்துள்ளதால் அவர்கள் பிராமணர்களாகத்தான் இருந்திருப்பார்கள் என்பதும் இவர்களின் ஊகம் மக்கா குரைஷிகள் அன்றைய காலகட்டத்தில் உயர்குலமாகக் கருதப்பட்டது உன்மைதான் ஆனால் இந்தியாவில் பிராணர்கள் உயர்சாதியினராகக் கருதப்படுவதற்க்கும் அன்று குரைஷிகள் உயர்குலமாகக் கருதப்பட்டதற்க்கும் நிறைய வேறபாடுகள் உள்ளன இங்கு பிராமணர்கள் மற்றுள்ள இந்துக்களை குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்களை வேசியின் மகன் நாயயை விடக் கேவலமானவன்என்று கூறுகிறார்கள்  தாழ்த்தப்பட்டவர்கள்  அக்ரஹாரம் உட்பட உயர்சாதியினர் வசிக்கும் பகுதிகளில் நடப்பதற்க்குக் கூடத்தடை இரட்டைக் குவளைமுறை போன்றவைகளையெல்லாம் உண்டாக்கி பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை அவர்கள் கூறுபோடவில்லை மக்காகுரைஷிகள்  பெரும்பாலும் தங்களை உயர்வாகக் கருதியதெல்லாம் காபாவை தாங்கள் நிர்வாகம் செய்பவர்கள் என்பதாலேயே தான் இருந்தது
குருநானக்கின் கூற்று
கட்டுரையாளர் காபா சிவாலயமா இருந்தது குரைஷிகள் முன்பு பிராமணர்களாக இருந்தார்கள் என்ற குருநானக்கின் கூற்றை கட்டுரையில் எடுத்தெழுதிவிட்டு பின் அவரே குருநானக் தவறாகக் கூட விளங்கியிருக்கலாம் என்று சொல்லிவிட்டார் குருநானக் தான் பிறப்பதற்க்கு பலநூறு ஆண்டுகளுக்கு முன்புள்ள வரலாற்றை எவ்வித ஆதாரமும் இல்லாமலேயே கூறியிருக்கிறார் எனவே நதியில் நீராடிக்கொண்டிருக்கும் போது தனக்கு ஞானம் பிறந்து விட்டாதக் கூறி உளறியதைப் போல் இதுவும் ஒரு உளரல்தானே தவிர ஆதாரமில்லை
இதுவரை நாம் எடுத்துக் காட்டிய விஷயங்களைச் சுருக்கமாக கீழே தருகிறோம்

சிலைவணக்கம் நடந்த இடங்களெல்லாம்  சிவாலயமாக  ஆகிவிடாது என்பது
 ஹஜருல் அஸ்வத் கல்லிற்க்கும் சிவலிங்கத்திற்க்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை
அன்றைய மக்காவாசிகளின் கடவுள் கொள்கைகளில் சில விஷயங்கள்
ஹஜ் போன்ற வணக்கவழிபாடுகளை அன்றைய மக்காவாசிகள் நிறைவேற்றிய விதம்
மறுபிறவிக் கொள்கையில் உள்ள வேறுபாடு
அன்றைய அரபிகள் விருத்தசேதனம் செய்திருந்தது
அன்றைய அரபிகள் வேதங்களை அறியாதிருந்தது
அன்றைய அரபிகள் இறைத் தூதர்களை அறிந்திருந்தது
புனித மாதங்கள் போன்றவற்றை கடைபிடித்து வந்தது
அன்றய மக்காவாசிகள் உயர்குலமாக கருதப்பட்டாலும் இந்து மதம் போல்  பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைக் கூறுபோடாதது
எனவே அன்றை மக்காவாசிகளுக்கும் இந்து மதத்திற்க்கும் உள்ள இவ்வளவு வேறுபாடுகளை விட்டுவிட்டு அன்றைய அரபிகள் இந்தியாவில் வணிகம் செய்தார்கள் பிராமணர்களைப் போல் குடுமி வைத்திருந்தார்கள் அதனால் காபா சிவாலயமாக இருந்திருக்கலாம் என்ற வடநாட்டுப் பாசிச சிந்தனைகளையெல்லாம் அண்ணன் தம்பிகளைப் போல இந்துக்களும் முஸ்லீம்களும் பழகிக்கொண்டிருக்கும் தமிழகத்தில் இறக்குமதி செய்வதை விட்டுவிட்டு Tamil Hindu. தளம் இந்துமதத்தைப் பற்றி ஆக்கப்பூர்வமாக ஏதாவது எழுதினால் தெரிந்து கொற்வதற்க்கு ஏதுவாக இருக்கும்

11 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    சகோ இதுவே என் முதல் வருகை., மாஷா அல்லாஹ் தெளிவான இடுகை.,
    காஃபா மனித மூலங்கள் மண்ணில் படைக்கப்பட்டதிலிருந்தே இஸ்லாமிய சான்றை பறை சாற்றி தான் கொண்டிருக்கின்றன., தமிழ் இந்துதளம் தனது பாசிஸ கொள்கையை இங்கும் புகுத்த பார்ப்பது தான் வேடிக்கை அதுவும் ஆய்வு என்ற பெயரில் கூறியிருப்பது தான் அபத்தம்!!
    ஆழமான கருத்துக்கள் - நன்றி சசோ

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் தெளிவான இடுகை.,

    ReplyDelete
  3. தளத்தின் பதில்
    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ குலாம் அவர்களே தங்களின் வருகைக்கு நன்றி உங்களின் கடவுளின் பிறப்பும் இறப்பும் கட்டுரையைத் தான் முழுவதுமாக படிக்க நேரம் கிடைக்கவில்லை நீங்கள் குறிப்பிட்டதைப் போல் தமிழ் ஹிந்து தளத்தினர் ஆய்வு செய்து இஸ்லாத்தை கொள்கை ரீதியாக விமர்சிப்பதை விட்டுவிட்டு இது போன்ற பாசிசத்தைத் தான் ஆய்வு என்கின்றனர்

    ReplyDelete
  4. தளத்தின் பதில்
    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ இப்ராஹிம் அவர்களே தங்களின் வருகைக்கு நன்றி எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அழைக்கும் சகோ ஹக்கீம்..
    தமிழ் ஹிந்து தளம், ஒரு பாசிச ஆர் எஸ் எஸ் தளம் மட்டுமல்ல..அவர்கள் கேடுகெட்ட மனிதர்கள்..ஆரம்பம் முதல் அவர்களை கவனித்து வருகிறேன்..பல சமயங்களில் அந்த தளத்தில் விவாதித்தும் இருக்கிறேன்..பல மறுப்புகளையும் எழுதியிருக்கிறேன்...இந்த கட்டுரையும் முன்னமே படித்தாகிவிட்டது..ஆனால் அங்கு வருபவர்களும்..ஆகா ஓகோ என பின்னுட்டம் போடுபவர்களும் பிற்போக்கு சிந்தனை கொண்ட அதே ரகத்தினர்...புதிய மனிதர்களை அங்கு காணவே முடியாது...ஒரு 15 முதல் 20 நபர்களே மாறி மாறி பதில் சொல்லிக்கொள்வார்கள்....அதனால் இதற்க்கு மறுப்பு எழுதி நேரத்தை வீணாக்க விரும்பாமல் விட்டுவிட்டேன்..
    ஹைர்..
    காபா குறித்து விரிவான அலசலை கொடுத்துள்ளீர்கள்..வாழ்த்துக்கள்..அல்லாஹ் உங்களது அறிவில் விசாலத்தை வழங்க போதுமானவன்...
    --
    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  6. தளத்தின் பதில்
    வலைக்கும் வஸ்ஸலாம் அன்புச் சகோ அப்துர்ரஹ்மான் அவர்களே நீங்கள் தமிழ் ஹிந்துத் தளத்தைப் பற்றிக் கொண்டிருக்குத் அதே எண்ணம் தான் எனக்கும் முன்பிருந்தே உள்ளது அதனால் தான் அதைக் கண்டுகொள்வதில்லை ஆனாலும் குறிப்பிட்ட இந்தக் கட்டுரைக்குப் பதிலளிக்கக் காரணம் ஆய்வுகளின் அடிப்படையில் இந்தக் கட்டுரையை எழுதியதைப் போல சாதரண ஹிந்து சகோதரர்களை நம்ப வைக்க அவர்கள் எடுத்த முயற்ச்சியே முதல்காரணம் அடுத்து சகோ ஆஷிக் அஹ்மது அவர்களின் எதிர்க்குரல் தளத்தில் பின்னூட்டம் இடுகிறேன் என்ற பெயரில் தலைப்புக்கே சம்பந்தம் இல்லாமல் காபா முன்பு சிவாலயமாக இருந்ததா என்று ஹிந்து தளத்தினர் மீண்டும் மீண்டும் பின்னூட்டமிட்டது போன்ற காரணங்கள் தான் பதில் எழுத வேண்டியதாயிற்று மற்றபடி அவர்களுடன் விவாதம் செய்ய வேண்டும் என்று நோக்கில் அல்ல அதை அவர்கள் வெளியிட்டுள்ள [பாகம் -17] இஸ்லாமும் இந்திய தேசியமும் – என்ற கட்டுரையில் பின்னூட்டமாகவும் தெரிவித்திருக்கிறேன் அந்தப் பின்னூட்டம் இதுதான்
    தமிழ் ஹிந்து தளத்தின் நிர்வாகிகளே காபா முன்பு சிவாலயமாக இருந்ததா
    என்ற கட்டுரைக்கு பதிலாக இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது http://neermarkkam.blogspot.com/2011/10/kaaba-munbu-sivaalayamaha-irunthatha_15.html
    இதை நேர்மையாக சிந்தித்தால் உங்களுக்கு உண்மை புரியும் என்று நினைக்கிறேன் இனிமேலாவது இஸ்லாத்தை விமர்சிப்பதாக இருந்தால் இந்துமத்தின் கொள்கையையும் இஸ்லாத்தின் கொள்கையையும் ஒப்பிட்டு கொள்கை ரீதியாக விமர்சித்தால் நன்றாக இருக்கும் அதை விட்டுவிட்டு காபா முன்பு சிவாலயமாக இருந்தது பைத்துல் முஹத்தஸ் பெருமால்கோவிலாக இருந்தது போன்ற ஆய்வுகளைத் தவிர்த்துடுவீர்கள் என்று நினைக்கிறேன்
    சகோ அப்துர்ரஹ்மான் அவர்களே அவர்களே உங்களின் வருகைக்கும் நீங்கள் பகிர்ந்து கொண்ட அறிவுரைக்கும் நன்றி அல்லாஹ் நம்மனைவருக்கும் கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவானாக
    By அப்துல் ஹக்கீம்

    ReplyDelete
  7. THODARANTHU IHUPOL VELIYIDAVUM.

    ReplyDelete
  8. அல்ஹம்துலில்லாஹ் இது போன்ற உண்மையான இடுக்கைகள் தமிழ் ஹிந்து இடுக்கை மீள்பதிவு செய்யவேண்டும் அல்லது அதன் வாசகர்களுக்கு இதனை நாம் இந்த உண்மையை அனுப்ப வேண்டும். அப்போதுதான் இஸ்லாத்தினை மற்றவர்களும் எளிதில் விளங்கமுடியும்.

    ReplyDelete
  9. it is so funny most of developing country people still believe in god. atheism is well established in western Europe, and getting place in America. all religions are not scientific. answer me why Islam accepts slavery and permit raping of enslaved women. but no doubt Tamil is oldest living language and Hinduism is oldest religion in the world. so it's possible that Kaaba was an Hindu temple and that time a variant of Hinduism existed in that time Arabia. because Hinduism was found in south east Asia up to Bali island.

    an atheist.

    ReplyDelete
  10. nanum tamilhindu website'a parthu kadupu aanen, avan podum ovvoru articles kum namma ethirpu therivithal avandaiya seiyal kooonjam koraiyum nu ethir pakkueren

    ReplyDelete
  11. arumaiyana visayam.jazakallah

    ReplyDelete