August 18, 2011

பத்ரை நோக்கி

ஏக இறைவனின் திருப்பெயரால்

  • ரமலான் 17ம் நாள் பெரும்பாலான பள்ளிகளில் சிறப்பு பயான்களை ஏற்பாடு செய்திருப்பார்கள் காரணம் அன்றுதான் இஸ்லாமிய வரலாற்றின் முதல் போரானா ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு நடைபெற்ற பத்ர் போர் தினம் இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் பூன்டோடு ஒழித்து விட வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொன்டு வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குரைஷிகுப்பார்களுடன் நாம் தோற்க்கடிக்கப்பட்டால் உலகில் அல்லாஹ்வை மட்டுமே வணங்கக்கூடியவர்கள் யாருமே எஞ்சியிருக்கமாட்டார்கள் என்ற நிலைமையில் (நபி ஸல்) அவர்களின் தலைமையில் வெறும் முண்ணுற்று பதிமூண்று ஸஹாபாக்களை மட்டுமே கொண்ட இஸ்லாமியப் படை மோதி இறைவனின் மாபெரும் கிருபையால் மிகப் பெரும் வெற்றி கொண்ட தினம் பத்ர்போரைப் பொருத்தவரை இரண்டு அணிகள் மோதிக்கொண்டன என்பதை விட இரண்டு கொள்கைகள் மொதிக்கொண்டன என்பதுதான் சரியாகும் ஒன்று வணக்கத்திற்க்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை என்ற கொள்கையைக் கொண்ட நபி(ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் மற்றொன்று அல்லாஹ்வுடன் மற்ற பலரையும் அழைத்துப் பிரார்த்தித்துக் கொண்டிருந்த குரைஷிக்காபிர்களான அபூஜஹ்லும் அவனது படையினரும் என்ன குரைஷிக்காபிர்களும் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டவர்களா? ஆம் அவர்களும் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டவர்கள்தான் அவர்களைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுவதைப் பாருங்கள்

 "வானங்களையும், பூமியையும்
படைத்தவன் யார்?'' என்று அவர்களிடம் நீர்
கேட்டால் "அல்லாஹ்'' என்று கூறுவார்கள்.
"அல்லாஹ்வையன்றி நீங்கள்
பிரார்த்திப்பவற்றைப் பற்றிக்
கூறுங்கள்!'' என்று கேட்பீராக! "அல்லாஹ்
எனக்கு ஒரு தீங்கை நாடிவிட்டால்
அவனது தீங்கை அவர்கள்
நீக்கி விடுவார்களா? அல்லது அவன்
எனக்கு அருளை நாடினால் அவர்கள்
அவனது அருளைத் தடுக்கக்
கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப்
போதும். சார்ந்திருப்போர்
அவனையே சார்ந்திருப்பார்கள்''
என்று கூறுவீராக    அல்குர்ஆன் 39 38

 அவர்களைப் படைத்தவன் யார்
என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ்
என்று கூறுவார்கள்.
எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?  அல்குர்ஆன் 43 87

"வானங்களையும், பூமியையும்
படைத்தவன் யார்?'' என்று அவர்களிடம் நீர்
கேட்டால் "மிகைத்தவனாகிய
அறிந்தவனே இவற்றைப் படைத்தான்'' எனக்
கூறுவார்கள்.  அல்குர்ஆன் 43 9

 ஆகிய வசனங்களில் மக்கா முஷ்ரிக்குகளும் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டவர்கள் தான் அல்லாஹ்வே தெளிவுபடுத்தி விட்டான் ஆக இருதரப்புமே அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டவர்கள் தான் பின்னர் எதற்க்காக யுத்தம் செய்யவேண்டும் என்றால் ஒருகாரணம் தான் அல்லாஹ்வை மட்டும் அழைத்துப் பிரார்த்திப்பதா அல்லது அவனுடன் மற்றுள்ளவர்களையும் சேர்த்துப் பிரார்த்திப்பதா என்பதுதான் ஆம் இன்று முஸ்லீம்கள் எனறு சொல்லிக்கொள்ளும் பலரும் கொண்டிருக்கும் அதே கொள்கையைத்தான் அன்றைய மக்கா முஷ்ரிக்குகளும் கொண்டிருந்தார்கள் அவர்களுக்கு  லாத் மனாத் உஸ்ஸா போன்ற நிற்கும் சிலைகள் என்றால் இவர்கள் ஏர்வாடி நாகூர்  முத்துப்பேட்டை போன்ற கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் சமாதிகள் அவர்கள் இப்ராஹிம் இஸ்மாயில் (அலை) போன்ற நபிமார்களுக்கு சிலை வடித்து பூஜித்தார்கள் என்றால் இவர்கள் அப்துல்காதிர் ஜெய்லானி ஷாகுல்ஹமிது பாதுஷா தொடங்கி 
ஒரிரைக்கொள்கையை உலகுக்குச் சொல்ல வந்த நபி(ஸல்) அவர்கள் உட்பட பெரியார்களைப் புகழ்கிறோம் என்ற பெயரில்மவ்லிது பாடல்களை வடித்து அவர்களை
அல்லாஹ்வைவிட பெரியவர்களாகச் சித்தரித்து அல்லாஹ்வை விட்டு விட்டு அவர்களிடம் பிரார்த்திப்பதும் உதவி தேடுவதுமான மிகப்பெரிய ஷிர்க்கைச் செய்து கொண்டிருக்கிறார்கள் பத்ர் தினத்தன்று பள்ளிகளில் நடக்கும் பத்ர்போரைப் பற்றிய பயானில் வேடிக்கை என்னவென்றால் எந்த நோக்கத்திற்க்காக பத்ர் யுத்தம் நடைபெற்றதோ அந்த நோக்கத்தையே குழிதோண்டி புதைத்துவிட்ட இந்த மார்க்க அறிஞர்கள்? வந்து பத்ரைப் பற்றி பேசுவதுதான் எனவே அன்புள்ள இஸ்லாமியச் சகோதர சகோதரிகளே அல்லாஹ் குர்ஆனில் கூறுவதைப்போல் அவர்கள் இனைவைத்தே தவிர அல்லாஹ்வை ஏற்பதில்லை என்ற வசனத்தின்படி வாழ்ந்து மறுமையில் நரகின் விரகுகளாகமல் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எந்த மார்க்கத்தைப் பின்பற்றச் சொன்னார்களோ அந்த மார்க்கத்தை நேரான முறையில் பின்பற்றி எந்த நோக்கத்திற்க்காக பத்ர் யுத்தம் நடைபெற்றதோ அந்த நோக்கத்தை நிறைவுசெய்து மறுமையில் இறைப்பொருத்தத்தையும் சொர்க்கத்தையும் அடைவதற்க்காக நாமும் பத்ரின் கொள்கைகளை நோக்கி நடை போடுவோமாக அதற்கு அல்லாஹ் நம்மனைவருக்கும் அருள் புரியட்டுமாக

                             அல்லாஹ் மிக அறிந்தவன்

                                                                                                 

No comments:

Post a Comment