ஏக இறைவனின் திருப்பெயரால்
முந்தைய தொடரில் இந்து மதமும் யூதகிருஸ்தவ மதங்களும் நாத்திகத்தின் பரிணாமவியல் கோட்பாடும் எப்படியெல்லாம் தீண்டாமையைத் தூன்டுகின்றன என்று பார்த்தோம் அந்தத் தொடரைக்காண இங்கே க்ளிக் செய்யவும்
இனி இஸ்லாம் எவ்வாறு தீண்டாமையை ஒழித்தது என்று பார்ப்போம்
தீண்டாமை எனும் கொடிய விஷத்தைப் பொருத்த வரை அது சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒன்றல்ல மனித வரலாறு தொடக்கம் முதலே தீண்டாமையும் இருந்துவந்துள்ளது எனவே தான் இந்த நவீன காலத்தில் வந்து தீண்டாமைக்குத் தீர்வு சொல்கிறோம் என்பது உன்மையான தீர்வாகாது என்கிறோம் ஒரு பிரச்சினை உருவாகும்போதே அதற்க்குத் தீர்வும் சொல்லவேண்டும் அதேநேரம் அந்தத்தீர்வானது எக்காலத்திற்க்கும் பொருந்துவதாகவும் இருக்கவேண்டும் அது முக்காலும் அறிந்த படைத்த இறைவனால் மட்டுமே முடியும் அந்த வகையில் தீண்டாமை என்றைக்கு உருவானதோ அன்றைக்கே அதற்க்குரிய தீர்வையும் இஸ்லாம் வழங்கியுள்ளது ஆம் ஆதம்(அலை) அவர்கள் முதல் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வரை வந்த எல்லா இறைத்தூதர்களுக்கும் இஸ்லாம் எனும் மார்க்கத்தை வாழ்க்கை நெறியாக அல்லாஹ் வழங்கியதே அந்தத்தீர்வு.
|
Tweet |